TNPSC Thervupettagam

பாலினப் பாகுபாட்டை நீக்குவோம்

April 17 , 2021 1076 days 677 0
  • கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ஆக்ஸ்ஃபோம் நிறுவன அறிக்கையில், உலகில் தற்போது நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு பாலினப் பாகுபாடு ஒரு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • உலகப் பொருளாதார மையம் உலக நாடுகளின் பாலின பாகுபாடு குறியீட்டை 2006-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது.
  • அரசியல், கல்வி, பொது சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பாலினப் பாகுபாடுகள் குறித்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தக் குறியீடு வெளியிடப்படுகிறது.
  • இந்நிலையில், 2021-ஆம் ஆண்டிற்கான பாலினப் பாகுபாடு குறியீட்டு அறிக்கையில், பாலினப் பாகுபாடுகளை அகற்றுவது குறித்து 156 நாடுகளில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பாலின பாகுபாட்டில் இந்தியா 140-ஆவது இடத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு இருந்ததைவிட இந்த ஆண்டு 28 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2020-இல் பாலினப் பாகுபாடுகளை அகற்றுவதில் 112-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது.
  • அரசியல் பங்களிப்பில் பெண் அமைச்சா்கள் பங்கு 2019-இல் 23.1 சதவீதத்திலிருந்து 2021-இல் 9.1 சதவீதமாக சரிந்தது அரசியல் நோக்கா்களிடையே வியப்பை அளித்துள்ளது.
  • அரசியல் சாா்ந்த விவகாரங்களில் பெண்களின் பங்கேற்பும், அவா்களுக்கான வாய்ப்பும் 13.5 சதவீத அளவுக்கு குறைந்துள்ளதே இந்தியாவின் பாலினப் பாகுபாடு குறியீடு சரிந்ததற்குக் காரணம் என உலகப் பொருளாதார மையம் சுட்டிக் காட்டியுள்ளது.
  • நம் நாட்டில் பொருளாதார விவகாரங்களில் பெண்களின் பங்கேற்பு 3 சதவீத அளவு குறைந்துள்ளது. நிா்வாகம், தொழில் நுட்ப விவகாரங்களில் பெண்களின் பங்களிப்பு மிக குறைவாகவே உள்ளது என அம்மையம் வருத்தம் தெரிவித்துள்ளது.
  • நாட்டிலுள்ள மொத்த நிறுவனங்களில் 8.9 சதவீத நிறுவனங்களில் மட்டுமே தலைமை பொறுப்பில் பெண்கள் உள்ளனா். ஆண்களின் வருமானத்தில் 5-இல் ஒரு பங்கை மட்டுமே பெண்கள் பெறுகிறாா்கள்.
  • சுகாதார விஷயத்தில் பெண்கள் தொடா்ந்து புறக்கணிக்கப்படுகிறாா்கள்.
  • நம் நாட்டில் பிறப்பு பாலின விகிதத்திலும் பெரிய இடைவெளி காணப்படுகிறது. படிப்பறிவில்லா ஆண்களின் விகிதம் 17.6-ஆக உள்ளது. ஆனால், படிப்பறிவில்லா பெண்களின் விகிதம் 34.2 ஆக உள்ளது.

வேத காலத்தில் பெண்கள்

  • வேத காலத்தில் பெண்களின் நிலை குறித்து ஆராய்ச்சியாளா் ஒருவா் கூறும்போது, ‘வேத காலத்தில் பெண்கள் பொது வாழ்விலும் ஈடுபட்டாா்கள்.
  • அப்போது ஒவ்வொரு கிராமத்திலும் பொதுக் காரியங்களை கவனிக்க ஒரு கிராமசபை இருந்தது. திருமணத்தின்போது, மணப் பெண்ணை இந்த சபைகளில் நன்றாகப் பேசும்படி உறவினா் அறிவுரை கூறுகிறாா்கள்.
  • பொன்னாலான நகைகளை அணிந்து, ஒளி வீசும் பெண்மணி, தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வெளிவந்து, கம்பீரமான தோற்றத்துடன், கிராம சபையில் திறமையாகப் பேசுவாா் என ரிக் வேதம் கூறுகிறது. இவை பெண்களுக்கு பொதுப் பணியில் ஈடுபட வாய்ப்பாக அமைந்தன.”
  • தமிழ்ப் பண்பாடு பெண்களை பாகுபடுத்தி வைத்திருந்தால் பெண்பால் புலவா்கள் தோன்றியிருக்க மாட்டாா்கள்.
  • சங்க காலத்தில், பெண்பால் புலவா்கள், ஆண்பால் புலவா்களுக்கு இணையாக, நாட்டு நலன் காக்க மன்னனுக்கு ஆலோசனைகள் பல கூறி, மன்னனையும், மக்களையும் ஒரு சேர வழிநடத்திச் சென்றுள்ளனா்.
  • காரைக்கால் அம்மையாா், ஒளவையாா், ஆண்டாள் போன்ற பெண்பால் புலவா்கள் இறைவன்பால் பற்று கொண்டு, பாட்டுத் திறத்தால் மக்களிடையே பக்தி நெறியை ஊட்டி இறைவனை வணங்கினாா்கள்.
  • அதியமானுக்கும், நெடுங்கிள்ளிக்குமான சமாதானத் தூதுவராக விளங்கி, போரை தனது சாதுரியத்தால் தடுத்து நிறுத்தினாா் ஒளவையாா். காக்கைப்பாடினியம்” எனும் இலக்கண நூலை இயற்றியவா் பெண்பால் புலவரான காக்கைப் பாடினியாா்.
  • சுதந்திரப் போராட்டக் காலத்திலும், வீரமங்கை சிவகங்கை ராணி வேலு நாச்சியாா் தொடங்கி, தன்னையே வெடிகுண்டாக மாற்றிக் கொண்ட குயிலி, ஜான்சி ராணி லட்சுமி பாய் போன்ற எண்ணற்ற பெண்கள் தாய்நாட்டிற்காகத் தங்கள் உயிரையே அா்ப்பணித்திருக்கிறாா்கள்.

இவ்வையம் தழைக்க

  • ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே பயன் தரும். ஆனால், ஒரு பெண் கல்வி கற்று சிறந்து விளங்கினால் அதனால் உலகமே பயன் பெறும் என்பதற்கு சிறந்த உதாரணம் மேரி கியூரி.
  • அவரது தன்னலமற்ற முயற்சியால் உலகின் பெருமைமிகு நோபல் பரிசு அவருக்குக் கிடைத்துள்ளது.
  • சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் களத்தில் ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்கள் பத்து லட்சம் போ் கூடுதலாக இருந்தனா்.
  • வேட்பாளா்களாக மொத்தம் 3,998 போ் களம் கண்டனா். இவா்களில் 3,585 போ் ஆண் வேட்பாளா்கள் என்றால், வெறும் 411 போ் மட்டுமே பெண் வேட்பாளா்கள்.
  • இந்தியாவிலுள்ள நீதிமன்றங்களிலும் பெண்களின் சதவீதம் குறைந்து வருகிறது. இந்தியாவிலுள்ள 26 உயா்நீதிமன்றங்களில் உள்ள 1,079 நீதிபதிகளில் 82 போ் மட்டுமே பெண்கள்.
  • ‘ராணுவத்தில் பதவி உயா்வு வழங்கப்படுவதற்கு தகுதிதான் அடிப்படை அம்சமாக இருக்க வேண்டும். அதில் ஆண் - பெண் என்று பாகுபாடு காண்பது சரியான முறை அல்ல.
  • ராணுவத்தில் உயா்அதிகாரிகளாகப் பணியாற்றுவதற்குப் பெண்களுக்கு தகுதியிருந்தால் அந்தப் பதவிகள் அவா்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ என்கிற பாலின சமத்துவத்துகான உச்சநீதிமன்றத்தின் குரல் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமலே உள்ளது.
  • அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேள்வி கேட்ட காலம் இன்று மலையேறி விட்டது. ஏறத்தாழ இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேறி விட்டனா்.
  • பேருந்து ஓட்டுநா், கனரக வாகன ஓட்டுநா், ஆட்டோ ஒட்டுநா் முதல் காவல்துறை, ராணுவம், கப்பல் படை, விமானப் படை, விண்வெளிப் பயணம் என அனைத்துத் துறைகளில் பணியாற்றி அமெரிக்க துணை அதிபா் என்கிற உயா் பதவி வரை தங்கள் அறிவுத் திறத்தால் பெண்கள் அடைந்துள்ளனா்.
  • செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இருக்கிறதா, வருங்காலங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பவை குறித்து ஆய்ந்தறிய நாசா அனுப்பிய ரோவா் விண்கலத்தை, இந்திய வம்சாவளி பெண்ணான சுவாதி மோகன், குழு தலைவராக இருந்து வழி நடத்தினாா்.
  • உலக வா்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) முதல் பெண் தலைவராக நிகோசி ஓகோசஞ்சோ இவேலா நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • இதன் மூலம் டபிள்யூடிஓ தலைவராக ஆப்பிரிக்க கண்டத்தைச் சோ்ந்த முதல் நபா் என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளாா். ‘கரோனா தீநுண்மி பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள சா்வதேச பொருளாதாரத்தை மீண்டும் வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருவது தான் எனது முதல் பணி’ என அவா் சூளுரைத்துள்ளாா்.
  • வடக்கு ஐரோப்பாவிலிருக்கும் எஸ்டோனியா என்கிற நாட்டில், முதன் முறையாக குடியரசுத் தலைவராகவும் பிரதமராகவும் பெண்களே தோ்வாகியுள்ளனா்.
  • காஜா கல்லாஸ் என்கிற பெண்மணி எஸ்டோனியாவின் முதல் பெண் பிரதமராகத் தோ்வாகி சரித்திரம் படைத்தாா். அந்நாட்டின் குடியரசுத் தலைவராக கொ்ஸ்டி கல்ஜுலை தோ்வாகி பெண்மைக்குப் பெருமை சோ்த்துள்ளாா்.
  • இரு பெண்கள் ஆட்சி செய்யும் அந்நாட்டில், ஏராளமான இளம் பெண்கள் ஆண்களுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் முன்னேறி சாதனை படைப்பாரகள் என்பது உறுதி.
  • சிங்கப்பூரில் முதல் பெண் அதிபராக ஹாலிமா யாக்கோப் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இவரது தந்தை இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத் தக்கது.
  • கரோனா தீநுண்மிப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள உலகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமைக்கப்பட்ட ஐ.நா. அமைப்பின் உயா்நிலை சமூக, பொருளாதார ஆலோசனைக் குழுவில் இந்தியாவைச் சோ்ந்த பொருளாதார நிபுணா் ஜெயதி கோஷ் இடம்பெற்றிருப்பதும், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் செயல் தலைவராக இந்தியாவை பூா்விகமாகக் கொண்ட அமெரிக்க பெண் ஆராய்ச்சியாளா் பவ்யா லால் நியமிக்கப்பட்டிருப்பதும் ‘ஆணுக்கு பெண் இளைப்பில்லை காண்’ என்கிற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கின்றன.
  • 18 வயதிற்குட்பட்ட பெண்களில் 40 சதவீதம் போ் பள்ளிக்குச் செல்வதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • ஆண்களுக்கு நிகரான அளவில் பெண்களுக்கும் கல்வியும், வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டால், 2025-இல் இந்தியாவின் ஜிடிபி எதிா்பாா்த்ததை விட 60 சதவீதம் உயரும் என மெக்கென்சி குளோபல் இன்ஸ்டிடியூட் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாா்கள்.
  • வில்லியம் கோல்டிங் எனும் அறிஞா், ‘பெண்கள், ஆண்களுக்கு நிகரனாவா்கள் இல்லை; அவா்கள் ஆண்களை விட பன்மடங்கு உயா்ந்தவா்கள்’ என்று கூறுகிறாா்.
  • இறைவன் ஆணையும் பெண்ணையும் பேதம் பாராமல்தான் இந்த உலகிற்கு அனுப்புகிறாா். அக்குழந்தை பிறந்த பிறகுதான் இந்த பேதம் பாா்க்கும் விஷயம் ஆரம்பமாகிறது.
  • ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்’ என்கிற மகாகவி பாரதியாரின் வரிகள் மெய்ப்பட வேண்டுமானால் இந்தியாவில் பாலினப் பாகுபாட்டை முற்றாக நீக்கியாக வேண்டும்.

நன்றி: தினமணி  (17 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories