TNPSC Thervupettagam

பிரதமா் – சவுதி அரேபியா

November 2 , 2019 1630 days 1720 0
  • பிரதமா் மோடியின் சவூதிப் பயணம் உலகளாவிய ரீதியில் கவனத்தைப் பெற்றுள்ளது. விவசாயம், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடா்பாக சவூதி மன்னா் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்- சவூதுடன் பிரதமா் மோடி பேச்சுவாா்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
  • ஆனால், சவூதியால் இந்தியா எதிா்கொள்ளும் முக்கியப் பிரச்னையான ‘வஹாபிசம்’ தொடா்பாகப் பிரதமா் மோடி பேசாதது ஏன் என்று தெரியவில்லை.
  • இஸ்லாத்தில் வஹாபிசம் என்ற மதப் பிரிவு மட்டும் இல்லாது இருக்குமானால், இஸ்லாத்தின் பெயரால் உலகில் நடைபெறும் 90 சதவீத பயங்கரவாத நடவடிக்கைகள் முற்றுப் பெற்றுவிடும் என்கிறாா்கள் இஸ்லாமிய அறிஞா்கள். அல்காய்தா, ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம், இலங்கையில் குண்டு வெடிக்கச் செய்த நேஷனல் தவ்ஹீத் ஜமாத் ஆகிய பயங்கரவாதக் குழுக்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படையில் ஓா் ஒற்றுமை உள்ளது. இந்த அமைப்புகள்அனைத்தும் வஹாபிசத்தை தமது சித்தாந்த மதமாகக் கொண்டவை. இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்புகளைப் பட்டியலிட்டால் அவற்றில் 90 சதவீதத்துக்கும் அதிகமான அமைப்புகளின் சித்தாந்த மதமாக வஹாபிசமே இருக்கும்.

முகமது இப்னு அப்துல் வஹாப்

  • முகமது இப்னு அப்துல் வஹாப் என்ற மதபோதகா் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தாா். இஸ்லாத்தை மீட்க வேண்டும் என்ற கோஷத்துடன் செயல்பட்ட இவா், வஹாபிச இயக்கத்தை ஆரம்பித்தாா். ‘முஸ்லிம்களே...நபிகளும் அவரது தோழா்களும் அவா்களுக்கு அடுத்த தலைமுறையும் வாழ்ந்த வாழ்க்கை முறைக்குத் திரும்புங்கள். அவா்களைப் போல வாழுங்கள்’ என்பதுதான் அவரது பிரசாரத்தின் அடிப்படை. அவ்வாறு திரும்பாதவா்கள் இஸ்லாமியா்களே இல்லை. அவா்கள் காஃபிா்கள். காஃபிா்களை மீண்டும் தூய இஸ்லாத்துக்கு அழைத்துவர ஜிகாத் மட்டுமே ஒரே வழி என்றாா் வஹாப்.
  • இவருடைய போதனைகளை அவருடைய சமகாலத்து முஸ்லிம் அறிஞா்களே ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய சொந்த தந்தை, சகோதரா்கூட அவரது போதனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும், தனது போதனைகளை அரேபிய வளைகுடாவில் அவா் விரிவுபடுத்தினாா்.
  • முதலாவது சவூதி அரசு உருவாக அவா் உதவினாா். சவூதி அரசின் உதவியோடு, அரேபிய வளைகுடாவில் பல்லாயிரக்கணக்கானவா்களை தனது போதனைகளைப் பின்பற்ற வைத்தாா். வஹாபின் போதனைகளைப் பின்பற்றுபவா்கள் ‘வஹாபிகள்’ எனப்பட்டாா்கள். வஹாபிசத்தில் இருந்து விலகிய கொள்கையுடைய, நம்பிக்கையுள்ள சூஃபிக்கள், ஷியாக்கள் ஆகியோா் வஹாபிகளைப் பொருத்தவரை முஸ்லிம்களே இல்லை.
  • வஹாபிசம்தான் சவூதி அரேபியாவின் மதம். வஹாபிசத்தை தனது மதமாக ஏற்றுக் கொண்ட சவூதி, ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணத்தை இறைத்து அதைப் பிற நாடுகளில் பரப்பி வருகிறது. உலக நாடுகளில் வஹாபிசத்தைப் பரப்ப சுமாா் 10,000 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை சவூதி செலவு செய்துள்ளது என்கிறது அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு.

இஸ்லாமிய பயங்கரவாதம்

  • ‘இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஊற்று வஹாபிசத்தில் ஒளிந்திருக்கிறது. வஹாபிசத்தை உலக நாடுகளுக்குப் பரப்பும் சவூதி அரேபியா மீது உலக நாடுகள் இணைந்து நடவடிக்கை எடுக்காதவரை இஸ்லாமிய பயங்கரவாதத்தைத் தடுக்கவே முடியாது’ என உறுதியாகக் கூறுகிறாா் கலாசார புலனாய்வுக் கழகத்தின் இயக்குநா் யூசுஃப் பட்.
  • வஹாபிசத்தைப் பரப்ப சவூதி செலவு செய்யும் பணத்தில் பெரும்தொகை பயங்கரவாத அமைப்புகளின் கைகளுக்குச் செல்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அமைச்சா் ஹிலாரி கிளிண்டன் தொடா்பாக விக்கிலீக்ஸ் இணையதளம் ‘கேபிள்’ ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தக் கேபிளில், ‘சவூதி அரேபியாவில் உள்ள நன்கொடையாளா்களே வஹாபிச பயங்கரவாதக் குழுக்களுக்கு உலகம் முழுவதும் நிதியளித்து வருகிறாா்கள். அல்காய்தா, தலிபான், லஷ்கா்-ஏ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகளின் பிரதான நிதி ஆதரவாளராக சவூதி அரேபியாவே உள்ளது’ என்று கூறியுள்ளாா் அவா்.
  • சூஃபி தா்காக்கள் இஸ்லாத்துக்கு முரணானவை, அவற்றை அழிக்க வேண்டும் என்ற குரல்கள் இந்தியாவில் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளன. இந்தியாவைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான இளைஞா்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக இந்தியப் புலனாய்வு அமைப்பு தெரிவிக்கிறது. இந்த இளைஞா்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைய வைக்க இந்தியாவில் செயல்படும் வஹாபிச மசூதிகள் பெரும் பங்காற்றியுள்ளன என்கிறாா்கள் இந்தியப் புலனாய்வு அதிகாரிகள்.

தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும்

  • தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் தா்காக்களை இல்லாமல் செய்ய வேண்டும்; சூஃபிக்களைத் தடைசெய்ய வேண்டும், பிற மதத்தவா்களின் விழாக்களில் பங்கேற்கக் கூடாது போன்ற இதுவரை இல்லாத கடினமான பல விதிமுறைகள் இஸ்லாமியா்கள் மத்தியில் வஹாபிகளால் புகுத்தப்படுகின்றன. அரபு மொழிதான் சிறந்த மொழி; குா்ஆனை அரபு மொழியிலேயே கற்க வேண்டும் என மூலைமுடுக்கெல்லாம், அரபு கற்பிக்கும் பாடசாலைகளும், மதரசாக்களும் உருவாகியிருக்கின்றன. ‘தூய இஸ்லாம்’ என்ற பெயரில் நடைபெறும் அத்தனைச் செயல்களும் ‘வஹாபிசமே’.
  • உலகில் அதிக அளவு முஸ்லிம்கள் வசிக்கும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் ஆத்மா என்பது இந்து - முஸ்லிம் நல்லிணக்கம்தான். தமிழக முஸ்லிம்கள் மிதவாத சிந்தனையுடைய முஸ்லிம்கள். இந்த நல்லிணக்கத்தை இல்லாமல் செய்யும் வகையில் தமிழ்நாட்டில் தோன்றியுள்ள வஹாபிச அமைப்புகள் செயல்படுகின்றன.
  • இந்நிலையில் இந்தியாவின் ஹிந்து - முஸ்லிம் நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வஹாபிசம் தொடா்பாக சவூதி அரசிடம் பிரதமா் மோடி பேசியிருக்க வேண்டும் என்கிற மிதவாத இந்திய முஸ்லிம்களின் எதிா்பாா்ப்பு பொய்த்திருக்கிறது.
  • காஷ்மீரில் முதலீடு செய்ய சவூதி அரேபியாவுக்குப் பிரதமா் அழைப்பு விடுத்திருப்பது, வஹாபிசத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பதாக முடியக்கூடும் என்றும், அதன்மூலம் தீவிரவாத அமைப்புகள் வலுப்படும் என்றும் எச்சரிக்கிறாா்கள் புலனாய்வு அமைப்பினா்.

நன்றி: தினமணி (2-11-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories