TNPSC Thervupettagam

கங்கை உத்சவம் - 2020

November 5 , 2020 1741 days 738 0
  • இது கங்கை நதியைத் தேசிய நதியாக அறிவிக்கப்பட்டதின் 12வது நினைவு தினத்தைக் கொண்டாடுவதற்காக தேசியத் தூய்மை கங்கைத் திட்டத்தினால் அனுசரிக்கப் பட்டு வருகின்றது.
  • இந்த நிகழ்ச்சியானது மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தினால் அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்தியாவின் மிக நீளமான நதி கங்கை ஆகும்.
  • கங்கை நதியானது கங்கோத்திரி பனிப் பாறையில் இருந்து பாகீரதி நதியாக உற்பத்தி ஆகின்றது.
  • பின்னர் இது உத்தரகாண்டில் உள்ள தேவபிரயாக் என்ற இடத்தில் அலக்நந்தா நதியுடன் இணைந்து, கங்கையாக உருவெடுக்கின்றது.
  • இந்த நதியானது உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பீகார்,  பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பாய்கின்றது.
  • கங்கை நதியானது பிரம்மபுத்திரா நதியுடன் இணைந்து வங்க தேசத்தில் பத்மா என்ற நதியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்