TNPSC Thervupettagam

COP 28 உச்சி மாநாட்டின் முன்முயற்சிகள்

February 5 , 2024 88 days 401 0

 

(For English version to this please click here)

COP 28 மாநாட்டின் இதர முன்முயற்சிகள் - 1

பசுமை கடன் முன்முயற்சி

  • COP28 உச்சி மாநாடானது நடைபெற்ற போது, பசுமைக் கடன் முன்முயற்சியினை இந்தியா தொடங்கியது.
  • இது புதுமையான சுற்றுச்சூழல் திட்டங்கள் மற்றும் கருவிகளைப் பரிமாறிக் கொள்வதற்கான உலகளாவிய பங்கேற்புத் தளத்தினை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த முயற்சியின் இரண்டு முக்கிய முன்னுரிமைகள் யாதெனில் நீர்ப் பாதுகாப்பு மற்றும் காடு வளர்ப்பு ஆகியவை ஆகும்.
  • பசுமை கடன் திட்டத்தை வர்த்தகம் அல்லாதது என்று இந்தியா விவரித்தது.
  • இது பல்வேறு துறைகளுக்கிடையேயான தன்னார்வ சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • இது ஒரு கார்பன் நீர்த்தொட்டியை உருவாக்குவதற்கான ஒரு வணிக ரீதியான முயற்சியாக இருக்கும்.
  • இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் யாதெனில் மரம் வளர்ப்பது, நீர்ப் பாதுகாப்பு, நிலையான விவசாயம் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற தன்னார்வ சுற்றுச்சூழல் செயல்பாடுகளைப் பெரு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மேற் கொள்ள ஊக்குவிப்பதாகும்.
  • நாடு எதிர்கொள்ளும் காலநிலைப் பிரச்சினைகளில் இது முக்கியதொரு மாற்றத்தைக் கொண்டு வருகிறது.
  • கழிவுகள்/பாழடைந்த நிலங்கள் மற்றும் நதி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு பசுமைக் கடன் வழங்குவதற்கும், இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் புத்துயிர் பெறச் செய்வதற்கும் மற்றும் அவை புத்துயிர் பெறுவதற்கும் இது திட்டமிடுகிறது.

இழப்பு மற்றும் சேத நிதி

  • இழப்பு மற்றும் சேத நிதி  (L&D) என்பது ஒரு நிதி சார்ந்த வழிமுறையாகும்.
  • காலநிலை மாற்றத்தின் தாக்கங்களில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு இழப்பீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இழப்பு மற்றும் சேத (L&D) நிதியினைச் செயல்படுத்துவதற்கான உடன்பாட்டினை உறுப்பு நாடுகள்  எட்டியுள்ளன.
  • குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் சிறிய தீவுகளில் உள்ள வளரும் நாடுகளுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தொடக்க காலக் கட்டத்தில் இழப்பு மற்றும் சேத நிதி தொடர்பான செயல்பாடுகளை உலக வங்கியானது கண்காணிக்கும்.
  • உலக வங்கியானது, UNFCCC மற்றும் பாரீஸ் உடன்படிக்கையுடன் இணைந்து நான்கு ஆண்டுகளுக்கு இந்த நிதியின் இடைக்காலப் புரவலராக இருக்கும்.
  • அனைத்து வளரும் நாடுகளும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவை என்பதோடு, ஒவ்வொரு நாடும் தானாக முன்வந்து இதற்குப் பங்களிக்க அழைப்பும் விடுக்கப் படுகின்றன.
  • இந்த நிதியானது காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் சமூகங்கள், நாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவற்றில் ஏற்படும் உண்மையான இழப்புகளை அங்கீகரித்து ஈடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த இழப்புகளானது பண மதிப்பிற்கு அப்பாற்பட்டது என்பதோடு, மனித உரிமைகள், நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றின் மையமாக துண்டிக்கப் படுகின்றன.

COP 28 உச்சி மாநாட்டில் WHO அமைப்பின் நிகழ்ச்சி நிரல்

  • ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்களின் மாநாடானது (COP) உடல்நலம்/நிவாரணம், மீட்பு மற்றும் அமைதிக்கான ஒரு அர்ப்பணிக்கப்பட்ட நாளினைக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது, COP28 உச்சி மாநாட்டின் தலைமையேற்பு நாடு மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் நடத்தப்பட்டது.
  • சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்களை ஒன்றிணைக்கும் முதல் காலநிலை-சுகாதார அமைச்சரை இது கொண்டுள்ளது.

COP 28 உச்சி மாநாட்டில் WHO அமைப்பின் மூலம் விடுக்கப்பட்ட மூன்று முக்கிய அழைப்புகள்

  • WHO இன் பொது இயக்குநரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், COP28 உச்சி மாநாட்டின் போது மூன்று முக்கியமான அழைப்புகளை விடுத்துள்ளார்:

படிம எரிபொருட்களை வெளியேற்றுதல்

  • காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு ஆதரவாக வேண்டி புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மாறுமாறு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார அமைப்புகளின் தட்பவெப்ப நிலைத்தன்மையை வலுப்படுத்துதல்

  • தட்பவெப்ப நிலையைத் தாங்கும் சுகாதார அமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி உள்ளார்.
  • இதில் பணியாளர்களை வலுப்படுத்துதல் மற்றும் நோய்க் கண்காணிப்பு உள்ளிட்டவையும் அடங்கும்.

புதைபடிவ எரிபொருள் மானியங்களை ஆரோக்கியத்திற்குத் திசை திருப்புதல்

  • புதைபடிவ எரிபொருள் மானியங்களுக்கான நிதியினை சுகாதாரத் துறைக்கு திருப்பி விடுவதற்காக அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
  • காலநிலை நெருக்கடியில் சுகாதாரத் துறை முன்னணியில் இருந்தாலும், அது உலக காலநிலை நிதியுதவியில் அரை சதவீதத்தை மட்டுமே பெறுகிறது.
  • நிதியினை திருப்பி விடுமாறு அவர் அழைப்பு விடுத்திருப்பதோடு, அதிக வருமானம் கொண்ட நாடுகளின் $100 பில்லியன் ஆதரவு உறுதிமொழியைப் பின்பற்றுமாறும் கெப்ரேயஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் உறுதிமொழி

  • 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனைக் குறைந்தது 11,000 ஜிகாவாட்டாக அதாவது மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டி அதற்கு கையொப்பமிட்ட நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த உறுதிமொழி கூறுகிறது.
  • 2030 ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு ஆண்டும் 2% முதல் 4% வரையிலான ஆற்றல் திறன் மேம்பாடுகளின் உலகளாவியச் சராசரி ஆண்டு விகிதத்தை ஒன்றிணைந்து கூட்டாக இரட்டிப்பாக்க வேண்டும்.

ALTÉRRA நிதி

  • துபாயில் நடைபெற்ற COP28 காலநிலை உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்த நிதியினைத் தொடங்கி வைத்தார்.
  • ALTÉRRA என்ற பெயரில் $30 பில்லியன் காலநிலை நிதியத்தை உருவாக்குவதாக அவர் அறிவித்தார்.
  • இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் $250 பில்லியன் முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, காலநிலை உத்திகளுக்கு $25 பில்லியன் மற்றும் உலகளாவியத் தெற்கில் முதலீட்டை ஊக்குவிக்க $5 பில்லியன் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிதியானது, குறிப்பாக வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களில், காலநிலை முதலீடுகளை நோக்கி தனியார் சந்தைகளை வழி நடத்த முயல்கிறது.
  • "Alterra" என்ற சொல் பொதுவாக லத்தீன் சொல்லைக் குறிக்கிறது.
  • திருத்தியமைத்தல், உருமாற்றம் அல்லது மாறுபாடுகளைக் குறிக்க இது பெரும்பாலும் பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிதியின் முதலீடுகள் நான்கு முக்கியத் தூண்களால் வழி நடத்தப் படுகிறது

  • 1) ஆற்றல் மாற்றம்
  • 2) தொழில்துறை கார்பன் நீக்கம்
  • 3) நிலையான வாழ்க்கை
  • 4) காலநிலைத் தொழில்நுட்பங்கள்

பசுமை தொழில்மயமாக்கல் முயற்சி

  • ஆப்பிரிக்கத் தலைவர்கள் பசுமைத் தொழில்மயமாக்கல் முயற்சியைத் தொடங்கினர்.
  • இது ஆப்பிரிக்கத் தொழில்களில் பசுமை வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், நிதி மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்துத் தற்போதுள்ள $4.5 பில்லியன் ஆப்பிரிக்கப் பசுமை முதலீட்டில் இந்த முயற்சியானது உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது தொழில்துறை மாற்றத்திற்கான கண்டத்தின் முன்னுரிமைகள் மற்றும் சமமான கூட்டாண்மைகளின் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.
  • பசுமைத் தொழில்மயமாக்கலுக்கான ஆபத்தை நீக்கி நீண்ட காலத் திட்டங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தைத் தலைவர்கள் வலியுறுத்தினர்.
  • டிஜிபூட்டி நாடானது 100% பசுமை ஆற்றலைப் பெற விழையும் நிலையில், ஜாம்பியா நாடானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் நன்மைக்காக வேண்டி பகிரப்பட்ட வளங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் வலியுறுத்தியது.
  • பசுமை ஆற்றல் மற்றும் வளங்களின் உலகளாவிய விநியோகிப்பாளராக ஆப்பிரிக்காவை நிலைநிறுத்துவதை இந்த முயற்சியானது நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிலையான குளிர்வித்தல் பற்றிய UNEP அறிக்கை

  • உலகளாவிய குளிர்வித்தல் துறையிலிருந்து வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில் ஒரு செயல் திட்டத்தை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டமானது (UNEP) முன்மொழிந்துள்ளது.
  • அதன் சமீபத்திய அறிக்கைக்கு "குளிர்ச்சியாக வைத்திருத்தல்: உமிழ்வைக் குறைக்கும் போது குளிரூட்டும் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி" என்று தலைப்பிடப் பட்டுள்ளது.
  • இந்த முன்முயற்சியானது 2050 ஆம் ஆண்டிற்குள் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் கணிசமானத் தாக்கத்தை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளதோடு, அவற்றை 60% அளவிற்குக் குறைக்கவும் எண்ணுகிறது.
  • உலகளாவியக் குளிர்வித்தல் உறுதிமொழிக்கு ஆதரவாக இந்த அறிக்கையானது வெளியிடப் பட்டுள்ளது.
  • இது ஐக்கிய அரபு அமீரகம் தலைமையேற்கும் உச்சி மாநாடு (COP28) மற்றும் குளிர்வித்தல் கூட்டணி ஆகியவற்றிற்கு இடையேயான ஒரு கூட்டு முயற்சியாகும்.

காலநிலை நிதி குறித்த புதிய கூட்டு அளவிடப்பட்ட இலக்கு (NCQG)

  • வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCTAD) காலநிலை நிதிக்கானப் புதிய கூட்டு அளவீட்டு இலக்கின் (NCQG) கீழ் செல்வந்தர் நாடுகள 2025 ஆம் ஆண்டில் வளரும் நாடுகளுக்கு 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் பட்டிருப்பதாக மதிப்பிடுகிறது.
  • 2015 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் வளர்ந்த நாடுகளால் NCQG இலக்கு உறுதிப்படுத்தப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கு முன் ஒரு புதிய கூட்டு அளவீட்டு இலக்கை அமைப்பதே இதன் இலக்காகும்.
  • இந்த இலக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற தளத்திலிருந்து தொடங்குகிறது.
  • இதில் தணிக்கை நடவடிக்கைக்காக 250 பில்லியன் அமெரிக்க டாலர்களும், தழுவல் நடவடிக்கைக்காக 100 பில்லியன் டாலர்களும், இழப்பு மற்றும் சேதத்திற்காக 150 பில்லியன் டாலர்களும் அடங்கும்.
  • இந்த எண்ணிக்கையானது 2030 ஆம் ஆண்டிற்குள் 1.55 டிரில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • வருடத்திற்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற தற்போதைய காலநிலை நிதி இலக்கு எட்டப்படவில்லை என்பதோடு, வளரும் நாடுகள் கடன் நெருக்கடியையும் எதிர்கொள்ளச் செய்கின்றன.
  • கட்டமைப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் உலகளாவிய நிதிக் கட்டமைப்பைச் சீர்திருத்த வேண்டி நிபுணர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

2023 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய கார்பன் உமிழ்வு கணிப்புகள்

  • EGR என்பது ஆண்டுதோறும் காலநிலைப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக வெளியிடப் படுகிற UNEP அமைப்பின் பொது மக்கள் கவனத்தை ஈர்த்தலுக்கான அறிக்கையாகும்.
  • EGR ஆனது உலகளாவிய உமிழ்வுகள் தற்போதைய நாட்டின் உறுதிப்பாடுகளுடன் அவை எங்கு செல்கிறது என்பதையும், அவை வெப்பமயமாதலை 1.5° C வரையில் கட்டுப்படுத்த வேண்டியதொரு இடைவெளியையும் கண்காணிக்கிறது .

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

வெப்பநிலை உயர்வுப் பாதை

  • இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 2.5-2.9 டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பநிலை உயர்வுக்கான பாதையில் உலகை அமைப்பதற்கான செயல்பாடுகளை பாரீஸ் ஒப்பந்தம் குறிப்பிட்டுள்ளது.
  • பாரீஸ் ஒப்பந்தம் (உறுப்பு நாடுகளின் 21வது மாநாடு அல்லது COP 21 என்றும் அழைக்கப்படுகிறது) ஒரு முக்கிய சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும்.
  • காலநிலை மாற்றம் மற்றும் அதன் எதிர்மறையான தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்காக இந்த ஒப்பந்தமானது 2015 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • வெப்பமயமாதலை 1.5-2 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, இது 2030 ஆம் ஆண்டிற்குள் 28-42% என்ற அளவிற்கு உமிழ்வினைக் கணிசமான குறைப்பதற்கான ஒரு அவசியத்தை உணர்த்தியது.

புதைபடிவ எரிபொருள் பிரித்தெடுத்தலின் வெளியேற்றம் தொடர்பான அறிக்கை

  • காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் உறுப்பினர்களின் 28வது மாநாட்டில் (COP28) வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில், 2030 ஆம் ஆண்டின் முற்பகுதியில் புதைபடிவ எரிபொருள் பிரித்தெடுப்பதைக் கனடா நிறுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கை அந்த நடவடிக்கையின் அவசரத்தினை மிகவும் வலியுறுத்துவதோடு, உமிழ்வுக் குறைப்புகளில் அதன் நியாயமானப் பங்களிப்பினைப் பூர்த்தி செய்வதில் வளர்ந்த நாடுகளின் பங்களிப்புத் தோல்வியுற்றதை பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்வதைப் பற்றியும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
  • "புதைபடிவ எரிபொருள் பிரித்தெடுப்பின் சமமான கட்டம்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை மூலமாக வளர்ந்த நாடுகள் தங்கள் தேசிய ரீதியாக நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகளில் (NDC) குறிப்பிடப்பட்டுள்ள லட்சியத்தைத் தாண்டியும் அவற்றை நிறைவேற்றுமாறு அந்நாடுகளை இது வலியுறுத்துகிறது.
  • நிறுவனங்களும் நாடுகளும் 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கான வழிகாட்டுந் தடங்களுடன் ஒத்துப் போவதை விட 2030 ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்கு அதிகமான புதைபடிவ எரிபொருட்களைப் பிரித்தெடுக்கும் வழித்தடத்திலுள்ள கவலையினை 2023 ஆம் ஆண்டு உற்பத்தி இடைவெளி அறிக்கையானது எழுப்புகிறது.
  • இந்த அறிக்கையானது நியாயமானப் பங்கு மற்றும் உண்மையான உமிழ்வுகளுக்கு இடையே உள்ள இடைவெளியை வலியுறுத்துகிறது.
  • அதிகப்படியான மக்கள் தொகையினைக் கொண்டிருந்தாலும் இந்திய தேசமானது 400 மெகா டன் அளவிற்கு மட்டுமே உமிழ்வினை வெளியிடுன் நிலையில், ஐக்கிய அமெரிக்க நாடுகளானது இந்தியாவின் உமிழ்வைத் தாண்டி, 2015-2022 ஆம் ஆண்டில் அதன் நியாயமானப் பங்களிப்பை விட 6.5 ஜிகா டன்கள் என்ற அளவில் அதிகப் படியான கரிம உமிழ்வைக் கொண்டிருந்தது.

COP 28 மாநாட்டின் இதர முன்முயற்சிகள் - 2

காலநிலை மற்றும் ஆரோக்கியம் பற்றிய பிரகடனம்

  • பசுமை இல்ல வாயு உமிழ்வுகளிலிருந்து ஆழமான, விரைவான மற்றும் நீடித்தக் குறைப்புகளின் மூலம் ஆரோக்கியத்திற்கான நன்மைகளை பெறுவதற்காக என்று காலநிலை நடவடிக்கைகளுக்கு இந்த அறிவிப்பு மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது.
  • இதில் இடைமாறுபாட்டு நிலை, குறைந்த காற்று மாசுபாடு, செயலில் உள்ள இயக்கம் மற்றும் நிலையான ஆரோக்கியமான உணவுகளுக்கு மாறுதல் ஆகியவையும் அடங்கும்.
  • இந்தப் பிரகடனத்தில் 124 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
  • இதுவரையில், அதிகப்படியானப் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளும், இந்தியாவும் இந்த கையெழுத்திட்ட நாடுகளின் பட்டியலில் இடம் பெறவில்லை.
  • காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய சுகாதாரம் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கியமான குறுக்கீட்டுச் சந்திப்பிற்குத் தீர்வு காண்பதை இந்த அறிவிப்பானது நோக்கமாகக் கொண்டது.
  • பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் விரைவான மற்றும் கணிசமான குறைப்புகளின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.

இந்தியா - BESS

  • அதிகாரப்பூர்வமாக பேட்டரி மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) கூட்டமைப்பில் இந்தியாவானது உறுப்பினராகியுள்ளது.
  • இது மக்கள் மற்றும் புவிக் கிரகத்திற்கான உலகளாவிய ஆற்றல் கூட்டணியின் (GEAPP) உலகளாவியத் தலைமைத்துவ மன்றத்தால் தொடங்கப்பட்ட ஒரு லட்சிய முயற்சியாகும்.
  • 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5 GW மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளின் ஒருங்கிணைந்த உறுதிப்பாட்டை அடையச் செய்வதே இக்கூட்டமைப்பின் முதன்மை நோக்கமாகும்.
  • இந்தியாவின் பங்கேற்புடன் கூடுதலாக, GEAPP தனது BESS திட்டங்களை நாட்டில் விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் உள்ள விநியோக நிறுவனங்களுக்கு 1 GW BESS இலக்கை எட்டுவதை GEAPP ஆனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 20 MW/40 MWh திறன் கொண்ட முதல் BESS திட்டமானது, சமீபத்தில் டெல்லியில் உள்ள IndiGrid நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
  • GEAPP ஆனது மொத்த மூலதன முதலீட்டில் 70 சதவீதத்தை உள்ளடக்கிய மானிய கடன் நிதியுதவியை வழங்க உள்ளது.

2023 ஆம் ஆண்டு UNICEF இன் HIV மற்றும் AIDS பற்றிய உலகளாவிய நிழற்பட நொடிப்பெடுப்பு

  • 2022 ஆம் ஆண்டு 10-19 வயதுடைய 98,000 இளம்பெண்கள் HIV ஆல் பாதிக்கப் பட்டுள்ளனர் அல்லது ஒவ்வொரு வாரமும் 1,900 புதிய HIV தொற்றுகள் ஏற்படுகின்றன.
  • உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கான யுனிசெப்பின் சமீபத்திய உலகளாவிய நிழற்பட நொடி  விவரக் குறிப்பானது வெளியிடப்பட்டது.
  • 10-19 வயதுடைய சிறுமிகளிடையே காணப்படும் மொத்த நோய்த்தொற்றுகள் 2010 முதல் 190,000 முதல் 98,000 வரை என பாதியாகக் குறைந்துள்ளன.
  • ஆனால் கடந்த ஆண்டு ஆண்களை விட பெண்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப் படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக காணப்பட்டது.
  • உலகளவில், 2022 ஆம் ஆண்டு 0-19 வயதுடைய அனைத்து குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே 270,000 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் காணப்படுகின்றன.
  • இது எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மொத்த இளைஞர்களின் எண்ணிக்கையை 2.6 மில்லியனாகக் கொண்டு கணக்கிட்டு வருகிறது.

தழுவல் மீதான உலகளாவிய இலக்கு (GGA)

  • தழுவல் குறித்த உலகளாவிய இலக்கு (GGA) பற்றிய வரைவு உரையானது இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது காலநிலை மாற்றத்தினை மேம்படுத்துவதற்காக பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப் பட்டுள்ளது.
  • பாரீஸ் ஒப்பந்தத்தின் 1.5/2°C இலக்கின் பின்னணியில், நாடு தழுவிய தேவைகள் குறித்த விழிப்புணர்வையும் நிதியுதவியையும் அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது உலகளாவிய தழுவல் இலக்கு தகவமைப்பு திறன்களை மேம்படுத்துவதிலும், நிலையான வளர்ச்சிக்கான பாதிப்பைக் குறைப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
  • COP28 உச்சி மாநாட்டில் ஆற்றப்பட்ட இந்த உரையில் தழுவல் நிதியை இரட்டிப்பாக்குதல், வரவிருக்கும் ஆண்டுகளில் மதிப்பீடுகள் மற்றும் தழுவல் தேவைகளைக் கண்காணிப்பதற்கான திட்டங்கள் போன்றவற்றை அது கோருகிறது.
  • நீர்ப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றின் இலக்குகளுக்கான உரையுடன் இது ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.

காலநிலை நிதி

  • காலநிலை நிதிக்கான புதிய கூட்டு அளவீட்டு இலக்கின் (NCQG) கீழ் 2025 ஆம் ஆண்டில் வளரும் நாடுகளுக்கு 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் பட்டிருப்பதாக வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடானது (UNCTAD) மதிப்பிடுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒரு புதிய கூட்டு அளவீட்டு இலக்கினை நிர்ணயிப்பதை இது இலக்காகக் கொண்டுள்ளது.
  • இதன் இலக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற தளத்திலிருந்து தொடங்குகிறது.
  • இதில் தணிக்கைக்காக 250 பில்லியன் அமெரிக்க டாலர்களும், தழுவலுக்கான நிதி 100 பில்லியன் டாலர்களும், இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதி 150 பில்லியன் டாலர்களும் அடங்கும்.
  • 2015 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் NCQG ஆனது வளர்ந்த நாடுகளால் உறுதிப்படுத்தப்பட்டது.
  • இந்த எண்ணிக்கையானது, 2030 ஆம் ஆண்டு 1.55 டிரில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • வருடத்திற்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற தற்போதைய காலநிலை நிதி இலக்கினை இது எட்டவில்லை.
  • மேலும் இதனால் வளரும் நாடுகள் கடன் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

வரைவு உரை குறிப்பிடும் முக்கியமான சிக்கல்கள்

  • காலநிலையால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையினைக் குறைத்தல்.
  • காலநிலையினை எதிர்க்கும் உணவு மற்றும் விவசாய உற்பத்தி.
  • காலநிலை தொடர்பான உடல்நலப் பாதிப்புகளுக்கு எதிரான உறுதியை வலுப்படுத்துதல்.

உலகளாவிய வறட்சி நிழற்பட நொடி விவரக் குறிப்பு – UNCCD (பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தம்)

  • ஒரு சில ஆபத்துகள் மட்டுமே அதிக உயிர்ச் சேதங்களையும், அதிக பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துவதோடு, வறட்சியை விட கூடுதலாக சமூகத்தின் பல துறைகளையும் அது பாதிக்கின்றது என்று உலகளாவிய நிழற்பட நொடி விவரக் குறிப்பு அறிக்கை குறிப்பிடுகிறது.
  • UNCCD அமைப்பின் படி, 1.84 பில்லியன் மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 4.7 சதவீதம் பேர் கடுமையான அல்லது தீவிரமான வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • உலக வங்கியின் கூற்றுப்படி, குறைந்த அல்லது நடுத்தர வருமான நாடுகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 85% மக்கள் வாழ்கின்றனர்.
  • 2022-23 ஆம் ஆண்டில் தேசிய அல்லது பிராந்திய அளவில் சுமார் 23 நாடுகள் (இந்தியா உட்பட) வறட்சி அவசரநிலைகளை அறிவித்துள்ளன.
  • ஐக்கிய நாடுகள் சபையால் தொகுக்கப்பட்ட உலகளாவிய வறட்சி வரைபடத்தின் புதிய தரவுகளின் படி இது கணிக்கப்பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி அன்று உலகமானது 2 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலை மீறி, 2023 ஆம் ஆண்டு வரை உலக நாடுகளால் மேற்கொண்ட அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது.

காலநிலைப் பங்குதாரர்கள் கூட்டணி : COP28

  • COP28 உச்சி மாநாடு நடைபெற்ற போது, வளரும் நாடுகளில் $11 பில்லியன் முதலீடுகளை உருவாக்க முயற்சிக்கும் வகையில் ஒரு காலநிலை நிதியுதவி தொடர்பான முயற்சியில், காலநிலைப் பங்குதாரர்கள் கூட்டணி அமைப்பானது சர்வதேச நிதி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
  • காலநிலைப் பங்குதாரர்கள் கூட்டணி என்பது ஒரு பரோபகார (கொடைப் பண்புள்ள) முதலீட்டு அமைப்பாகும்.
  • வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், காலநிலை தொடர்பான திட்டங்கள் மற்றும் வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களில் வணிகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற பல நோக்கங்களுடன் அது செயல்படுகிறது.
  • இது குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூகத் தாக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தென்கிழக்கு ஆசியா, கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகியவை அதன் ஆரம்பக் கவனம் செலுத்தும் பகுதிகளாகும்.

LeadIT 2.0 இன் தொடக்கம்

  • ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உறுப்பினர்களின் மாநாட்டில் (COP 28) 2023 ஆம் ஆண்டிற்கான தொழில் மாற்றத்திற்கான தலைமைக் குழுவினை (லீட்ஐடி இந்தியா மற்றும் ஸ்வீடன் தலைமையேற்று நடத்தியது.
  • இந்த உச்சி மாநாட்டில் LeadIT (2.0) இன் இரண்டாம் கட்டத்தின் மூன்று தூண்களை சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது அறிவித்தது.
  • LeadIT என்பது ஒரு உலகளாவிய முன்முயற்சியாகும்.
  • இது எஃகு, சிமெண்ட், இரசாயனங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற சவாலான துறைகளை குறைந்த கார்பன் பாதைகளுக்கு மாற்றுவதையும் விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பாரீஸ் உடன்படிக்கையை அடைய வேண்டுமென்பதற்காக நடவடிக்கை எடுக்க உறுதி பூண்டுள்ள நாடுகளையும், நிறுவனங்களையும் LeadIT ஆனது ஒன்றிணைக்கிறது.

  • இது 2019 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் காலநிலை நடவடிக்கையின் உச்சி மாநாட்டின் போது ஸ்வீடன் மற்றும் இந்திய அரசாங்கம் ஆகியவை இணைந்து தொடங்கப் பட்டது.
  • இதன் செயல்பாடுகளை உலகப் பொருளாதார மன்றமானது ஆதரிக்கிறது.
  • 38 உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளையும், நிறுவனங்களையும் LeadIT ஆனது உள்ளடக்கியுள்ளது.
  • குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா ஒரு செயற்பாட்டு நிலையிலுள்ள பங்கேற்பாளராக காணப்படுகின்றது.
  • ஆற்றல் மிகுந்த தொழில்கள் மூலம் குறைந்த கார்பன் பாதையில் முன்னேறலாம் மற்றும் முன்னேற வேண்டும் என்ற கருத்திற்கு LeadIT உறுப்பினர்கள் வலு சேர்த்துள்ளனர்.
  • 2050 ஆம்  ஆண்டிற்குள் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதை இது இலக்காகக் கொண்டுள்ளது.

காலநிலை வெற்றியாளர்

  • மைக்கேல் சரேட் பாலோமெக் மற்றும் செபாஸ்டியன் மவாரா ஆகியோர் ஐநா விருதுகளை வென்றனர்
  • மெக்சிகோவைச் சேர்ந்த மைக்கேல் ஜரேட் பால்மெக் மற்றும் கென்யாவைச் சேர்ந்த செபாஸ்டியன் முவாரா ஆகிய இரண்டு குறிப்பிடத்தக்க நபர்களும் காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு இடையில் ஐக்கிய நாடுகளின் குளோபல் காலநிலை நடவடிக்கை விருதுகளின் வெற்றியாளர்களாக கௌரவிக்கப்பட்டனர்.
  • நிலையான, நெகிழ்ச்சியான மற்றும் சமமானச் சமூகங்களை உருவாக்குவதை அவர்களின் முதன்மையான பங்களிப்புகளானது நோக்கமாகக் கொண்டிருந்தன.
  • துபாயில் நடந்த ஐநா காலநிலை மாற்ற மாநாட்டின் உறுப்பினர்களின் உச்சி மாநாடான COP28 மாநாட்டின் போது இது கொண்டாடப்பட்டது.

உலகளாவிய காலநிலையில் விவசாயத்தின் 40% தாக்கம்

  • ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சமீபத்தியப் பகுப்பாய்வின் படி, 40% நாடுகள் பொருளாதார இழப்பை நேரடியாகச் சந்திப்பதோடு, உலகளவில் காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்ட துறையாக விவசாயம் தனித்து நிற்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.
  • 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1, அன்று இந்த அறிக்கையானது UN உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் (FAO) வெளியிடப்பட்டது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்ற காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் பருவநிலை கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) உறுப்பினர்களின் 28வது மாநாட்டில் (COP28) நடந்து கொண்டிருக்கும் பல்வேறு விவாதங்களுக்கு இது குறிப்பிடத்தக்க வலுவினைச் சேர்க்கிறது.

  • 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் 168 நாடுகளின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்டப் பங்களிப்புகளை (NDCs) FAO அறிக்கையானது ஆராய்கிறது.
  • அதிர்ச்சியூட்டும் வகையில், தற்போதைய காலநிலை செயல் திட்டங்களில் மூன்றில் ஒரு பங்கில் (35%) வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் விவசாயம் தான் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
  • வியக்கத்தக்க வகையில், இழப்பு மற்றும் சேதத்தை முன்னிலைப்படுத்தும் நாடுகளில் நான்கில் மூன்று பங்கு என்பது நடுத்தர வருமான நாடுகளில், முக்கியமாக லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் மற்றும் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ளன.
  • இந்தப் பகுப்பாய்வு என்பது பொருளாதாரம் மற்றும் பொருளாதாரம் அல்லாத இழப்புகளுக்கு இடையே ஒரு முக்கியமான வேறுபாட்டை உருவாக்கியது.

  • பொருளாதாரம் அல்லாத இழப்புகளில் 33% ஆனது விவசாயத் துறையுடன் தொடர்புடையது.
  • ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, இழப்பு மற்றும் சேதம் மற்றும் காலநிலை நிதி தொடர்பான விவாதங்களில் விவசாயம் முதன்மையாக கவனம் செலுத்தவில்லை.
  • உலகளவில் 866 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பணியமர்த்தும் மற்றும் 2020 ஆம் ஆண்டில் $3.6 டிரில்லியன் வருவாயைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேளாண் உணவுத் துறையானது, உலகளாவிய அமைப்புகளில் ஒரு மையமாக உள்ளது.

COP 28 மாநாட்டின் இதர முன்முயற்சிகள் - 3

உலகளாவிய காலநிலை அறிக்கை

  • 2022 ஆம் ஆண்டின் உலகளாவிய காலநிலை அறிக்கையினை உலக வானிலை அமைப்பானது (WMO) வெளியிட்டுள்ளது.
  • பசுமை இல்ல வாயுக்கள், வெப்பநிலை, கடல் மட்ட உயர்வு, பெருங்கடலில் ஏற்படும் வெப்பம் மற்றும் அமிலமயமாக்கல், கடல் பனி மற்றும் பனிப்பாறைகள் போன்ற முக்கியக் காலநிலை குறிகாட்டிகள் மீது இந்த அறிக்கையானது கவனம் செலுத்துகிறது.
  • காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை ஆகியவற்றின் தாக்கங்களையும் இது எடுத்துக் காட்டுகிறது.
  • முன்னதாக, WMO ஆனது 2022 ஆம் ஆண்டின் தற்காலிக நிலையினை உலகளாவிய காலநிலை அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையின் கண்டுபிடிப்புகள்

  • 2022 ஆம் ஆண்டின் உலகளாவியச் சராசரி வெப்பநிலையானது 1850-1900 ஆம் ஆண்டுகளின் சராசரியை விட 1.15 °C அதிகமாக இருந்தது.
  • லா நினா காலநிலையானது, குளிர்ச்சியான மூன்று வருடங்கள் இருந்த போதிலும் இது நடைபெற்றது.
  • கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற "டிரிபிள் டிப்" லா நினா நிகழ்வு மூன்று முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது.

உலகளாவிய நதி நகரங்களின் கூட்டணி (GRCA)

  • இது இந்திய அரசாங்கத்தின் தூய்மையான கங்கைக்கான தேசியப் பணித் திட்டம் (NMCG) என்ற திட்டத்தின் கீழ் ஜல் சக்தி அமைச்சகத்தின் தலைமையின் COP 28 மாநாட்டில் தொடங்கப்பட்டது.
  • GRCA என்பது 11 நாடுகளிலுள்ள 275 உலகளாவிய நதி நகரங்களை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான கூட்டணியாகும்.
  • எகிப்து, நெதர்லாந்து, டென்மார்க், கானா, ஆஸ்திரேலியா, பூடான், கம்போடியா, ஜப்பான் மற்றும் நெதர்லாந்தில் இருந்து ஹேக் (டென் ஹாக்) நதி-நகரங்கள், ஆஸ்திரேலியாவிலிருந்து அடிலெய்ட் மற்றும் ஹங்கேரியின் சோல்னோக் ஆகியவை இந்தக் கூட்டணி நாடுகளில் அடங்கும்.
  • GRCA ஆனது நதியினை மையமாகக் கொண்ட நிலையான வளர்ச்சி மற்றும் காலநிலை மீள்தன்மை தொடர்பான இந்தியாவின் பங்களிப்பினை எடுத்துக் காட்டுகிறது.
  • அறிவுப் பரிமாற்றம், நதி-நகரங்களை இணைத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரப்புதல் ஆகியவற்றை GRCA இயங்குதளமானது எளிதாக்கும்.
  • இது அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றின் கரையில் அமைந்துள்ள 124 நகரங்கள் அல்லது நகரங்களைக் குறிக்கிறது.
  • நதி நகரங்களின் கூட்டணியின் (RCA) சார்பாக MoCP ஒப்பந்தத்தில் NMCG ஆனது கையெழுத்திட்டுள்ளது.
  • இது பல்வேறு பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பு, அறிவுப் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கான தளமாக செயல்படும்.
  • இது அரசாங்கங்கள், நகரங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கியது.

உமிழ்வுப் பகிர்வு அறிக்கை

  • வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் வசிப்பவர்களிடையே கார்பன் வெளியேற்றத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் மன்றத்தின் (CEEW) சமீபத்திய ஆய்வறிக்கையானது வெளிப்படுத்துகிறது.
  • அர்ஜென்டினா, பிரேசில், இந்தியா மற்றும் ஆசியான் பிராந்தியம் போன்ற வளரும் நாடுகளில் உள்ள பணக்காரர்களின் 10% உமிழ்வை விட, பல வளர்ந்த நாடுகள் தனிநபர் கார்பன் உமிழ்வை அதிக அளவில் (டெசில்) வெளிப்படுத்துகின்றனர் என்பதை இந்த ஆய்வானது எடுத்துக்காட்டுகிறது.
  • மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்காவைத் தவிர்த்து வளரும் நாடுகளில் உள்ள முதல் 10% நபர்கள் ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் வெளியிடும் அதே அளவு கார்பன் டை ஆக்சைடை விட குறைந்த உமிழ்வு அளவுகளில் வெளியிடுகின்னர்.
  • வளர்ந்த நாடுகளின் கீழ் 10% வருமான வரம்பில் உள்ள தனிநபர்கள், இந்தியா, பிரேசில் அல்லது ஆசியான் பிராந்தியத்தின் ஏழ்மையான டெசிலில் உள்ளவர்களை விட 6 முதல் 15 மடங்கிற்கு அதிகமான அளவில் கார்பன் தடயங்களைக் கொண்டுள்ளனர்.
  • உலகளாவிய கார்பன் நிலப்பரப்பின் சிக்கலான தன்மையை வலியுறுத்தி, வருமானக் குழுக்களுக்குள் கூட கார்பன் உமிழ்வு ஏற்றத்தாழ்வுகளை இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தேசிய நீலத்துளி அறிக்கை 2023

  • 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய நீலத்துளி அறிக்கையானது நீர் மற்றும் சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டது.
  • தென்னாப்பிரிக்கா நாட்டின் குடிநீரின் தரமானது 2014 ஆம் ஆண்டிலிருந்து குறைந்துள்ளதோடு, அதில் கிட்டத்தட்ட பாதி இப்போது நுண்ணுயிரியல் ரீதியாக நுகர்வுக்குப் பொருத்தமற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆய்வானது ஒன்பது தென்னாப்பிரிக்க மாகாணங்களை உள்ளடக்கியதோடு, மொத்தம் 48,486,567 மக்களுக்குச் சேவை செய்கிறது.
  • உள்கட்டமைப்பு நிலை, பராமரிப்பு, செயல்பாடு, சிகிச்சை முறைகள், கண்காணிப்பு மற்றும் பணியாளர்களின் நிபுணத்துவம் போன்ற பல்வேறு குணாதிசயங்களை 958 நீர் வழங்கல் அமைப்புகளை (WSS) 144 நீர் சேவை அதிகாரிகள் (WSA) முழுவதுமாக ஆய்வினை மேற்கொண்டனர்.
  • 2014 ஆம் ஆண்டில் 33 WSAகளில் 174 WSS ஆக இருந்த 62 WSA களில் WSS அமைப்பின் 29% அளவு மிக ஆபத்தான நிலையில் இருப்பதைத் தணிக்கையாளர்கள் 2023 ஆம் ஆண்டில் கண்டறிந்துள்ளனர்.
  • அத்தியாவசிய அமைப்புகளின் ஒட்டு மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, இது ஒரு கவலை கொண்ட போக்கினைக் குறிக்கிறது.
  • தேசிய நீலத்துளி அபாய மதிப்பீடானது, 2022 ஆம் ஆண்டு 52.3% என்ற அளவிலிருந்து 2023 ஆம் ஆண்டு 47.15% ஆக உயர்ந்தது.

ஐநாவின் ‘எதிர்ப்புக்கான பந்தயத்தில்’ இந்தியா இணைதல் 

  • ஐக்கிய நாடுகள் சபையின் மீள்தன்மைக்கான போட்டி என்ற உலகளாவியப் பிரச்சாரத்தில் இணைவதன் மூலம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
  • துபாயில் சமீபத்தில் முடிவடைந்த COP28 நிகழ்வின் போது அறிவிக்கப்பட்ட இந்த முடிவானது, அதன் நகர்ப்புறங்களில் காலநிலைப் பின்னடைவை உருவாக்கச் செய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
  • மீள்தன்மைக்கான போட்டி என்பது அரசு சாராச் செயல்பாட்டாளர்கள், முதலீட்டாளர்கள், வணிகங்கள், நகரங்கள், பிராந்தியங்கள் மற்றும் குடிமைச் சமூகத்தை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட உலகளாவியத் தளமாகும்.
  • 2030 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு மிகவும் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களின் பின்னடைவை மேம்படுத்துவதே இதன் குறிக்கோளாகும்.
  • 2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பிரச்சாரமானது, காலநிலை தொடர்பான அபாயங்களைக் குறைக்கும் மற்றும் நெகிழ்ச்சியான நகர்ப்புறச் சூழல்களை உருவாக்குவதற்கான உத்திகளை உருவாக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் ஒரு கூட்டு இடமாகச் செயல்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒருமித்த கருத்து

  • முதல் முறையாக, துபாயில் நடந்த COP28 உச்சி மாநாட்டில் 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை எட்டுவதற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை உலகத் தலைவர்கள் முடிவு செய்தனர்.
  • விவசாயம், உணவு மற்றும் காலநிலை தொடர்பான ‘COP28 மாநாட்டின் UAE பிரகடனத்தின் ஒப்புதலானது, காலநிலை மாற்றப் பதில்களில் நிலையான விவசாயம் மற்றும் உணவு முறைகளை உட்பொதிக்கிறது.
  • காலநிலை மற்றும் ஆரோக்கியம் குறித்த COP28 மாநாட்டின் UAE பிரகடனமானது, காலநிலையை எதிர்க்கும், நிலையான மற்றும் சமமான சுகாதார அமைப்புகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது.
  • உலகளாவிய கரிமநீக்க முடுக்கியானது (GDA), உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க, ஆற்றல் திறன் உறுதிமொழி, எண்ணெய் மற்றும் எரிவாயு கரிமநீக்க சாசனம் போன்ற முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியது.

பாரீஸ் உடன்படிக்கையின் தூண்கள்

  • விரைவான கண்காணிப்பு ஆற்றல் மாற்றம்.
  • காலநிலை நிதியைச் சரிசெய்தல்
  • மக்கள் மற்றும் இயற்கையின் மீது கவனம் செலுத்துதல்.
  • காலநிலை நடவடிக்கையில் உள்ளடக்கத்தை வளர்த்தல்.
  • இது 2050 ஆம் ஆண்டிற்குள் நிகரப் பூஜ்ஜியத்தை அடைய புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மாறுவதற்கு அழைப்பு விடுக்கும் ஒரு விரிவான ஆவணம் ஆகும்.

நன்னீர் மீன் மீதான முதல் உலகளாவிய மதிப்பீடு

  • காலநிலை மாற்றச் செயல்பாடுகள் நன்னீர் மீன்கள் முதல் அட்லாண்டிக் சால்மன் மற்றும் பச்சை ஆமைகள் வரை அதிக அளவில் உயிரினங்களை அச்சுறுத்துகிறது.
  • இது COP28 மாநாட்டில் வெளியிடப்பட்ட அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் IUCN சிவப்புப் பட்டியலின் படி இருந்தது.
  • IUCN சிவப்புப் பட்டியலில் இப்போது 157,190 இனங்கள் உள்ள நிலையில், அவற்றில் 44,016 அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன.
  • இந்த IUCN சிவப்புப் பட்டியல் புதுப்பிப்பு, காலநிலை மற்றும் பல்லுயிர் நெருக்கடிகளுக்கு இடையே உள்ள வலுவான இணைப்புகளை எடுத்துக் காட்டுவதோடு மேலும் அவை கூட்டாகச் சமாளிக்கப்பட வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
  • காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவுகளுக்கு உயிரினங்கள் அழிவு ஒரு எடுத்துக் காட்டாக உள்ளது.

உலகின் நன்னீர் மீன் இனங்களின் நிலை

  • உலகின் நன்னீர் மீன் இனங்கள் பற்றிய முதல் விரிவான மதிப்பீடு இதுவாகும்.
  • 25% (மதிப்பிடப்பட்ட 14,898 இனங்களில் 3,086) அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன என்பதை இது வெளிப்படுத்துகிறது.
  • அழிந்து வரும் நன்னீர் மீன் இனங்களில் குறைந்தது 17% காலநிலை மாற்றத்தால் பாதிக்கப் படுகிறது.
  • நீர் மட்டம் குறைதல், கடல் மட்டம் உயர்வதால் கடல் நீர் மட்டம் ஆறுகளின் உயரத்திற்கு மேல் செல்வது, பருவநிலை மாறுதல் ஆகியவையும் இதில் அடங்கும்.
  • 57% நன்னீர் மீன் இனங்கள் மாசுகளால் அழிந்து போகும் அபாயத்திலும், 45%க்கும் அதிகப்படியான இனங்கள் அணைகள் மற்றும் நீர் பிரித்தெடுத்தல் அபாயத்திலும் 25%க்கும்  இனங்கள் அதிகப்படியான மீன்பிடித்தலாலும், 33% இனங்கள்  தீங்கு விளைவிக்கும் ஆக்கிரமிப்பு இனங்கள் மற்றும் நோய்களாலும் பாதிக்கப் படும் பல ஆபத்துக்களை இது உள்ளடக்கியுள்ளது.

ENACT கூட்டாண்மை

  • ஆறு புதிய நாடுகளும் ஐக்கிய நாடுகளின் முகவாண்மையும் ENACT என்ற கூட்டாண்மையில் இணைகின்றன.
  • இந்தப் புதியக் கூட்டணியில் பிரான்ஸ், அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அதன் உலகப் பாதுகாப்பு கண்காணிப்பு மையம் உட்பட UN சுற்றுச்சூழல் திட்டம் ஆகியவையும் அடங்கும்.
  • ENACT கூட்டாண்மை என்பது ஒரு உலகளாவிய முயற்சியாகும்.
  • இது காலநிலை மாற்றம், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் பல்லுயிர் இழப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்கான உலகளாவிய முயற்சிகளை ஒருங்கிணைக்க முயல்கிறது.
  • ஜெர்மனி மற்றும் எகிப்து, இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்துடன் இணைந்து COP27 மாநாட்டில் ENACT (விரைவுபடுத்தப்பட்ட காலநிலை மாற்றத்திற்கான இயற்கை அடிப்படையிலானத் தீர்வுகளை மேம்படுத்துதல்) தொடங்கப் பட்டது.
  • COP27 மாநாடானது 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் எகிப்து நாட்டின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் நடைபெற்றது.
  • கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஸ்பெயின், மலாவி, நார்வே, தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளும் இக்கூட்டாண்மையின் நிறுவன உறுப்பினர்களாக இருந்தன.

அணுசக்தியினை மூன்று மடங்கு அதிகரிப்பதற்கான பிரகடனம்

  • COP28 மாநாட்டில் தொடங்கப் பட்ட இந்தப் பிரகடனமானது 2050 ஆம் ஆண்டளவில் உலகளாவிய அணுசக்தித் திறனை மூன்று மடங்காக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • 22 நாடுகளின் தேசிய அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்தப் பிரகடனமானது சர்வதேச நிதி நிறுவனங்களின் பங்குதாரர்களின் ஆதரவைக் கோருகிறது.
  • எரிசக்திப் பரிமாற்றக் கொள்கைகளில் அணுசக்தியை இணைத்துக் கொள்ள வேண்டி இது பங்குதாரர்களை ஊக்குவிக்கிறது.

முந்தைய நிலக்கரி கூட்டணிக்கு வலிமை சேர்த்தல் (PPCA)

  • PPCA என்பது தேசிய மற்றும் துணை-தேசிய அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டணியாகும்.
  • COP28 மாநாட்டில்தொடங்கப் பட்ட PPCA கூட்டணி புதிய தேசிய மற்றும் துணை தேசிய அரசாங்கங்களை வரவேற்றதோடு, தூய்மையான ஆற்றல் மாற்றங்களுக்கும் அழைப்பு விடுத்தது.

COP 28 மாநாட்டின் இதர முன்முயற்சிகள் - 4

உலகளாவிய கையிருப்பு உரை

  • உலகளாவிய கையிருப்பு (GST) என்பது ஒரு குறிப்பிட்ட கால மதிப்பாய்வு பொறிமுறையாகும்.
  • இது 2015 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப்பட்டது.
  • உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பிற்குள் வைத்திருக்க எட்டு படிகளை இந்த உரை முன்மொழிகிறது.
  • இது உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மூன்று மடங்காக உயர்த்தவும், 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய சராசரி வருடாந்திர ஆற்றல் திறன் மேம்பாடுகளை இரட்டிப்பாக்கவும் அழைப்பு விடுக்கிறது.
  • இது தடையற்ற நிலக்கரி சக்தியினை பகுதி பகுதியான அளவில் குறைப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துகிறது.
  • நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன்னரோ அல்லது அதற்குள்ளாகவோ பூஜ்ஜிய மற்றும் குறைந்த கார்பன் எரிபொருட்களைப் பயன்படுத்தும் முயற்சிகளை  துரிதப் படுத்த வேண்டி நிகர பூஜ்ஜிய உமிழ்வு ஆற்றல் அமைப்புகளை நோக்கிய முயற்சிகளை உலகளவில் இது விரைவுபடுத்துகிறது.
  • இது பூஜ்ஜிய மற்றும் குறைந்த உமிழ்வு தொழில்நுட்பங்களை துரிதப்படுத்துகிறது.

  • இதில் கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு, மற்றும் குறைந்த கார்பன் வெளியிடும் ஹைட்ரஜன் உற்பத்தி ஆகியவையும் அடங்கும்.
  • இது ஆற்றல் அமைப்புகளில் தடையற்ற புதைபடிவ எரிபொருட்களைப் பதிலீடு செய்து மாற்றுவதற்கான முயற்சிகளை மேம்படுத்துகிறது.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்காக புதைபடிவ எரிபொருட்களை ஆற்றல் அமைப்புகளிலிருந்து நாம் இடம் மாறுவது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
  • இது CO2 அல்லாத உமிழ்வை துரிதப்படுத்துவதோடு, அதனைக் கணிசமாகக் குறைக்கிறது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளவில் மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைப்பது உட்பட இதில் அடங்கும்.
  • இது பல்வேறு வழிப் பாதைகள் வழியாக சாலைப் போக்குவரத்திலிருந்து உமிழ்வைக் குறைப்பதையும் துரிதப்படுத்துகிறது.
  • மேலும் இதில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பூஜ்ஜிய மற்றும் குறைந்த உமிழ்வு வாகனங்களை விரைவாகப் பயன்படுத்துதல் ஆகியவையும் அடங்கும்.

  • பயனற்ற நுகர்வை ஊக்குவிக்கும் திறனற்ற புதைபடிவ எரிபொருள் மானியங்களை படிப்படியாக நிறுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • திறனற்ற புதைபடிவ எரிபொருள் மானியங்கள் ஆற்றல் வறுமை அல்லது ஆற்றல் மாற்றங்களை கூடிய விரைவில் தீர்க்காது.
  • கிளாஸ்கோவில் நடைபெற்ற COP26 மாநாட்டின் தொடர்ச்சியினை இந்த ஐந்தாவது மறு செய்கை உரை  பராமரிக்கிகிறது.
  • பல்வேறு ஆற்றல் தேவைகளைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் உலகளாவிய விழைவினை இது சமநிலைப் படுத்துகிறது.

உலகளாவிய குளிர்வித்தல் உறுதிமொழி

கூட்டு முயற்சி

  • இது COP28 மாநாட்டின் தொகுப்பாளரான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் UNEP தலைமையிலான குளிர்வித்தல் கூட்டணி ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
  • இது குளிர்வித்தல் துறையிலிருந்து ஆற்றல் உமிழ்வு துறையின் மீதான உலகின் முதல் கூட்டு முயற்சியாகும்.

செயலற்ற குளிரூட்டும் உத்திகள்

  • இது காப்பு, இயற்கை நிழல், காற்றோட்டம் மற்றும் பிரதிபலிப்பு மேற்பரப்புகள், அதிக ஆற்றல் திறன் தரநிலைகள் மற்றும் காலநிலையை வெப்பமயமாக்கும் ஹைட்ரோஃப்ளூரோகார்பன் (HFC) குளிர்பதனப் பொருட்களின் விரைவான குறைக்கச் செய்தல் போன்ற செயல்களைக் கோடிட்டுக் காட்டுகிறது.

நோக்கம்

  • 2050 ஆம் ஆண்டிற்குள் குளிர்ச்சி உமிழ்வைக் குறைந்தது 68% ஆக குறைக்க இது நாடுகளை உறுதி ஏற்க செய்கிறது.

விளைவு

  • இது 2050 ஆம் ஆண்டிற்குள் வழக்கமான வணிக குளிரூட்டலிலிருந்து திட்டமிடப்பட்ட உமிழ்வினை சுமார் 3.8 பில்லியன் டன்கள் என்ற அளவு CO2க்குச் சமமானதாக குறைக்கலாம்.

சாண்டியாகோ வலையமைப்பு

  • காலநிலையால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களை நிர்வகிப்பதால் பாதிக்கப்படக் கூடிய வளரும் நாடுகளுக்கு உதவுவதற்காக ஒரு கூட்டுக் கட்டமைப்பானது ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
  • இழப்பு மற்றும் சேதத்திற்கான வார்சா சர்வதேசப் பொறிமுறையின் (WIM) ஒரு பகுதியாக மாட்ரிட்டில் நடைபெற்ற COP 25 ஆவது மாநாட்டில் இது நிறுவப்பட்டது.
  • தொழில்நுட்ப உதவி, அறிவு மற்றும் வளங்களுடன் பாதிக்கப்படக் கூடிய வளரும் நாடுகளை இணைப்பதே இந்த வலையமைப்பின் நோக்கமாகும்.
  • கடல் மட்ட உயர்வு, உருகும் பனிப்பாறைகள், புயல்கள் மற்றும் வெள்ளம் போன்ற காலநிலை அபாயங்களை நிவர்த்தி செய்ய அதிக வளங்கள் தேவைப்படுகிறது.

பசுமை எழுச்சிக்கான முயற்சி

  • ஐக்கியப் பேரரசின் கிளாஸ்கோவில் நடைபெற்ற உறுப்பினர்களின் மாநாட்டில் (COP26) "ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டம்" - அல்லது OSOWOG பற்றிய பிரகடனத்தை இந்தியாவும் இங்கிலாந்தும் இணைந்து கூட்டாக அறிவித்தன.
  • GGI-OSOWOG ஆனது உலகளாவிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சூரிய ஆற்றல் அமைப்புகளை உருவாக்க வேண்டி 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • சர்வதேச சூரிய சக்தி ஆற்றல் கூட்டணியின் கீழ், ஐக்கியப் பேரரசுடன் இணைந்து ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டம் (GGI-OSOWOG) – பசுமைப் பிணைப்பு என்ற முன்முயற்சியை இந்தியா அறிவித்தது.
  • OSOWOG அமைப்பிற்கு பின்னால் உள்ள தொலைநோக்கானது சூரியன் எப்போதும் மறைவதில்லை என்பதாகும்.
  • இது உலகளவில் எந்த நேரத்திலும் சில புவியியல் சார்ந்த தளத்தில் நிலையானதாக உள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க வளங்களைத் திறம்பட பயன்படுத்துவதில் உலகளாவிய ஒத்துழைப்புக்கான கட்டமைப்பினை உருவாக்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து நாடுகளும் தங்கள் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுத்தமான மற்றும் திறமையான ஆற்றலைப் பெறுவதே ஒரு நம்பகமான வழி என்பதை இது உறுதி செய்கிறது.
  • சூரியனின் ஆற்றலைப் பயன்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக உலகளாவிய அளவில் ஒன்றோடொன்று நன்கு இணைக்கப் பட்ட மின்சாரக் கட்டத்தை உருவாக்கவும் இந்தத் திட்டமானது விழைகிறது.

  • இந்த முன்முயற்சியானது, அடிமட்ட மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளின் மீது இளைஞர்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • காலநிலை மாற்றத்தின் கடுமையான தாக்கங்களை எதிர்கொள்ள உலகளாவிய முயற்சியுடன் இது ஒத்துப் போகிறது.
  • உலகளாவிய "பசுமை எழுச்சி" முன்முயற்சி மற்றும் "பசுமை எழுச்சி இந்தியா கூட்டணி" ஆகியவை யுனிசெஃப், வரம்பற்ற தலைமுறை என்ற அரசு சாரா அமைப்பு (Generation Unlimited) மற்றும் பலதரப்பட்ட பொது, தனியார் மற்றும் இளைஞர் கூட்டாளர்களை உள்ளடக்கிய கூட்டு முயற்சியைக் குறிக்கிறது.
  • உலகெங்கிலும் மில்லியன் கணக்கான இளைஞர்களை அணி திரட்டுவதை இது முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
  • இது அச்சமூகங்களின் மீது ஏற்படும் காலநிலை மாற்றத்தின் கடுமையான தாக்கங்களை நிவர்த்தி செய்யும் மற்றும் மாற்றியமைக்கும் பசுமை முயற்சிகளில் அவர்கள் தீவிரமாக பங்கேற்பதை ஊக்குவிக்கிறது.
  • இந்தியாவில் YuWaah என்ற பிரச்சாரத்தின் மூலம், கடைமட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளைத் தணிப்பதற்காக இளைஞர்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்தப் படுகிறது.

எண்ணெய் மற்றும் எரிவாயு கார்பன் நீக்க சாசனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு

  • எண்ணெய் மற்றும் எரிவாயு கார்பன் நீக்க சாசனத்தின் (OGDC) அதிகாரப்பூர்வ வெளியீட்டை COP28 மாநாட்டின் தலைவர் டாக்டர். சுல்தான் அல் ஜாபர் மற்றும் சவுதி அரேபியப் பேரரசு ஆகியோர் இணைந்து அறிவித்தனர்.
  • எண்ணெய் மற்றும் எரிவாயு கார்பன் நீக்க சாசனம் என்பது எண்ணெய் மற்றும் எரிவாயு துறைக்கான ஒரு பிரத்தியேக முயற்சியாகும்.
  • காலநிலைச் சவால்களை எதிர்கொள்வதில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போது, ​​உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் மேலான கூட்டுப் பொறுப்பினை 50 நிறுவனங்கள் ஒன்றிணைந்து OGDC அமைப்பிற்கு உறுதிளித்துள்ளன.
  • தேசிய எண்ணெய் நிறுவனங்கள் இது தொடர்பான வரலாற்றுப் பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளன.
  • இது மொத்தமாக கையொப்பமிட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
  • இது இந்தத் துறைக்கான கார்பன் நீக்கத்தினை நோக்கிய குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.
  • இது உலகளாவிய கார்பன் நீக்க முடுக்கி (GDA) அமைப்புடன் ஒருங்கிணைந்ததாகும்.

குளோபல் கூலிங் வாட்ச் 2023

  • UNEP அமைப்பின் குளோபல் கூலிங் வாட்ச் 2023 அறிக்கையானது குளிரூட்டலிலிருந்து பூஜ்ஜியத்திற்கு அருகில் உமிழ்வை அடைவதற்கான பாதைகளை எடுத்துக்காட்டுகிறது.
  • இது மூன்று முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது.
  • அவையாவன செயலற்றக் குளிரூட்டல், அதிக ஆற்றல் திறன் தரநிலைகள் மற்றும் காலநிலையினை வெப்பமயமாக்கும் குளிர்பதனங்களின் வேகமான குறைப்பு ஆகியவைகும்.
  • உலகளாவிய குளிரூட்டுதல் தொடர்பான உறுதிமொழியுடன் இது ஒத்துப் போவதோடு, இந்த அறிக்கையானது குளிரூட்டல் தொடர்பான உமிழ்வைக் குறைப்பது மற்றும் நிலையான குளிர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நடவடிக்கைகளைக் கட்டிடக் குறியீடுகளில் இணைக்கவும், அதிக திறன் கொண்ட தயாரிப்புகளுக்கான தேவையை அதிகரிக்க நிதிக் கருவிகளைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கிறது.
  • COP28 மாநாட்டின் காலநிலைப் பேச்சுவார்த்தைகளின் போது வெளியிடப்பட்ட குளிரூட்டும் கூட்டணியின் அறிக்கையானது, மேலே கொடுக்கப்பட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் 2050 ஆம் ஆண்டிற்குள் குளிரூட்டலிலிருந்து வெளியேறும் உமிழ்வினைக் குறைந்தது 60% அளவிற்கு குறைக்கலாம் என்று பரிந்துரைக்கிறது.

  • விரைவான மின் பிணைப்புக் கட்டத்தின் கார்பன் நீக்கத்துடன் இணையும் போது இந்த நடவடிக்கைகள் குளிரூட்டும் துறையிலிருந்து உமிழ்வினை 96% அளவு வரை குறைக்கலாம்.
  • முன்னதாக, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் குளிர் கூட்டணி மற்றும் COP28 மாநாட்டினை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன இணைந்து இந்த உலகளாவிய குளிரூட்டும் உறுதிமொழியை அறிமுகப் படுத்தியது (இந்த உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது)
  • 2016 ஆம் ஆண்டில், 150க்கும் மேற்பட்ட நாடுகள் மாண்ட்ரீல் நெறிமுறைக்கு (இந்தியா உட்பட) கிகாலி திருத்தத்தில் கையெழுத்திட்டதோடு அவை 2047 ஆம் ஆண்டிற்குள் HFC நுகர்வினை 80% குறைப்பதற்காக ஒப்புக் கொண்டன.
  • 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் குளிரூட்டும் செயல் திட்டமானது தொடங்கப்பட்டது.
  • இது 2037-38 ஆம் ஆண்டிற்குள் அனைத்துத் துறைகளிலும் குளிரூட்டும் தேவையை 20% முதல் 25% ஆகவும், குளிர்பதனத் தேவையை 2037-38 ஆம் ஆண்டிற்குள் 25% முதல் 30% ஆகவும் குறைக்க முயல்கிறது.

COP28 மாநாட்டின் விதி 6 தொடர்பான கலந்துரையாடல்கள்

  • காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) உறுப்பினர்களின் 28வது மாநாடு (COP) ஆனது முன்னேற்றம் மற்றும் சவால்கள் இரண்டையும் கண்டுள்ளது.
  • விதி 6.2, விதி 6.4 மற்றும் விதி 6.8 ஆகியவற்றிற்கான கட்டமைப்பினை இறுதி செய்யும் நோக்கத்துடன், சந்தை அணுகுமுறைகளுக்கான விதிகள் மற்றும் நடைமுறைகளைச் செம்மைப்படுத்துவதில் பெரும் கவனம் செலுத்தப் பட்டுள்ளது.

"இயற்கைக்கான நிதி நிலை" அறிக்கை

  • இயற்கைக்கான நிதி நிலை அறிக்கை என்பது ஐக்கிய நாடுகளின் ஒரு புதிய அறிக்கை, இயற்கையின் மீது நேரடியாக எதிர்மறையான தாக்கங்களைக் கொண்ட மானியங்கள் மற்றும் தனியார் முதலீடுகளில் நாடுகள் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட $7 டிரில்லியன் முதலீடு செய்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.
  • இந்த அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையானது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% ஆகும்.
  • இது நிதி நடைமுறைகளில் ஒரு பெரும் மாற்றத்தின் அவசரத் தேவையை எடுத்துக் காட்டுகிறது.
  • காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின் உறுப்பினர்களின் 28வது மாநாட்டில் (COP28) UN சுற்றுச்சூழல் இணைய முகப்பால் (UNEP) இந்த அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 8 அன்று வெளியிடப் பட்ட இந்த அறிக்கையானது, இயற்கையை எதிர்மறையாகப் பாதிக்கும் தனியார் நிதி ஓட்டங்களைப் பகுப்பாய்வு செய்வதோடு இது அந்தச் சிக்கலின் அளவைப் பற்றிய முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நுண்ணறிவுகளை வழங்குகிறது.

உலகளாவிய காலநிலை நடவடிக்கை - 7வது பதிப்பு

  • துபாயில் நடைபெற்ற COP28 மாநாட்டினை ஒட்டி வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான காலநிலை மாற்றச் செயல்திறன் குறியீட்டு (CCPI) அறிக்கையில்  இந்தியா 7வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 'மிக உயர்ந்த' செயல்திறன் பிரிவில் முதல் மூன்று தரவரிசைகள் காலியாகவே இருந்தன.
  • 1.5°C என்ற இலக்கை அடைய CCPI நாடுகள் 2025 ஆம் ஆண்டளவில் உமிழ்வு அளவில் உச்ச நிலையைக் கொண்டிருக்க வேண்டும்.
  • காலநிலை மாற்றச் செயல்திறன் குறியீடு (CCPI) என்பது ஒரு ஆண்டு அறிக்கையாகும்.
  • இது ஜெர்மன்வாட்ச், புதிய காலநிலை காலநிலை நிறுவனம் மற்றும் காலநிலை நடவடிக்கை வலையமைப்பு ஆகியவற்றால் 2005 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 450 காலநிலை மற்றும் ஆற்றல் நிபுணர்களின் ஈடுபாட்டுடன் தயாரிக்கப்பட்டது.

COP 28 மாநாட்டின் இதர முன்முயற்சிகள் - 5

நிலக்கரி மாற்ற முடுக்கி

  • பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பிரான்ஸ் நாடானது நிலக்கரி மாற்ற முடுக்கியை அறிமுகப்படுத்தியது.
  • நிலக்கரியிலிருந்து சுத்தமான எரிசக்திக்கு மாறுவதற்கு வசதியாக அறிவுப் பகிர்வு, கொள்கை வடிவமைப்பு மற்றும் நிதி உதவி ஆகியவையும் இதன் நோக்கங்களில் அடங்கியுள்ளது.
  • இந்த முயற்சியானது சிறந்த நடைமுறைகள் மற்றும் பயனுள்ள நிலக்கரி மாற்றக் கொள்கைகள் தொடர்பாக கற்றுக் கொண்ட பாடங்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

https://rmi.org/wp-content/uploads/2021/11/coal-transition.png

உயர் லட்சிய பலநிலை கூட்டாண்மைகளுக்கான கூட்டணி (CHAMP)

  • மொத்தமாக 65 தேசிய அரசாங்கங்கள் CHAMP உறுதிமொழிகளில் கையெழுத்திட்டன.
  • காலநிலை உத்திகள் தொடர்பாக திட்டமிடுதல், நிதியளித்தல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றில் துணை-தேசிய அரசாங்கங்களுடன் பொருந்தக் கூடிய மற்றும் பொருத்தமான இடங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

கட்டிடங்கள் குறித்த திருப்புமுனை முயற்சி

  • UN சுற்றுச்சூழல் திட்டத்துடன் (UNEP) இணைந்து கட்டிடங்கள் தொடர்பான திருப்புமுனை முயற்சியினை COP28 மாநாட்டில் இல் பிரான்ஸ் மற்றும் மொராக்கோ நாட்டு அரசாங்கங்கள் தொடங்கியுள்ளன.
  • கட்டுமானத் துறையின் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கு நாடுகள் ஒன்றிணைவதை இது கண்காணிக்கும்.
  • 2030 ஆம் ஆண்டளவில் பூஜ்ஜியத்திற்கு அருகில் உள்ள உமிழ்வுகள் மற்றும் கால நிலையை எதிர்க்கும் கட்டிடங்களை புதிய இயல்புநிலைக்கு மாற்றும் நோக்கில் இது தொடங்கப்பட்டது.
  • உலகளாவியப் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் இந்தத் துறை மட்டும் 21 சதவிகிதம் அளவிலான உமிழ்வினைக் கொண்டுள்ளது.
  • இதுவரை இருபத்தேழு நாடுகள் கட்டிடங்கள் தொடர்பான திருப்புமுனை முயற்சிக்கு தங்கள் உறுதிமொழியினை வழங்கியுள்ளன.
  • கட்டிடங்கள் குறித்த திருப்புமுனை முயற்சி என்பது முன்னணி பொது, தனியார் மற்றும் பொது-தனியார் உலகளாவிய முன்முயற்சிகளின் கூட்டணியின் மூலம் உருவாக்கப்பட்ட திருப்புமுனை முயற்சி தொடர்பான  நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதிகும்.
  • முக்கிய உமிழ்வுத் துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் நாடுகள், வணிகங்கள் மற்றும் குடிமைச் சமூகம் ஆகியவை இணைந்து தங்கள் நடவடிக்கைகளை வலுப்படுத்த இது ஒரு கட்டமைப்பை வழங்குகிறது.
  • இந்தப் புதிய முயற்சியானது, கட்டிடத் துறையில் கார்பன் நீக்கம் செய்ய சர்வதேச ஒத்துழைப்பினை  வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்துப் பிராந்தியங்களிலும் சுத்தமான தொழில் நுட்பங்கள் மற்றும் நிலையான தீர்வுகளை மிகவும் மலிவு, அணுகக் கூடிய மற்றும் கவர்ச்சிகரமான விருப்பமாக மாற்றுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

மீத்தேன் உமிழ்வுகள் மற்றும் நிகர-பூஜ்ஜியத் திட்டங்கள்

  • 2030 ஆம் ஆண்டிற்குள் மீத்தேன் உமிழ்வை முற்றிலுமாக அகற்றுமாறு எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையை COP28 மாநாடு வலியுறுத்தியது.
  • COP28 மாநாடானது 2050 ஆம் ஆண்டிற்குள் தங்கள் நடைமுறைகளை நிகர-பூஜ்ஜிய உமிழ்வுத்  திட்டங்களுடன் சீரமைக்க கேட்டுக் கொண்டுள்ளது.
  • COP28 மாநாடானது ஹைட்ரோகார்பன் பயன்பாட்டின் தற்போதைய உலகளாவியப் பின்னணியில் கார்பன் தீவிரத்தைக் குறைத்து இறுதியில் அவற்றை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
  • புவி வெப்பமடைதலுக்கு முக்கியப் பங்களிப்பாளர்களில் மீத்தேன் உமிழ்வுகள் இடம் பெற்றுள்ளன.
  • புதைபடிவ எரிபொருள் செயல்பாடுகளானது மனிதனால் உருவாக்கப்பட்ட மீத்தேன் உமிழ்வுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை ஆகும்.
  • இதனை சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) தெரிவித்துள்ளது.

  • இதன் விளைவாக, மீத்தேன் உமிழ்வை நிவர்த்தி செய்வது மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஒன்றாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • பருவநிலை மாற்றத்தினை எதிர்ப்பதற்கு எரிசக்தித் துறையானது இந்த நடவடிக்கைகளைத் தொடர முடியும்.
  • COP28 மாநாடானது எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து மாறுவதற்கான உலகளாவிய அர்ப்பணிப்பு ஏற்படுத்தப் பட்டதை முதல் முறையாகக் குறித்தது.
  • இது புதைபடிவ எரிபொருள் சகாப்தத்தின் "இறுதியின் தொடக்கத்தினை" ஒரு விரைவான மற்றும் சமமான மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைப்பதன் மூலம் சமிக்ஞை செய்கிறது.
  • உலகளாவிய ஒற்றுமை தொடர்பான செயல் விளக்கத்தின், கிட்டத்தட்ட 200 உறுப்பு நாடுகளின் பேச்சுவார்த்தையாளர்கள் உலகின் முதல் 'உலகளாவியப் பங்குகள்' குறித்த முடிவோடு துபாயில் ஒன்று கூடினர்.
  • இது இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் காலநிலை நடவடிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • உலகளாவிய வெப்பநிலை வரம்பான 1.5 டிகிரி செல்சியஸை அடையும் வகையில் இது தொடங்கப்பட்டது.
  • இப்போது அனைத்து அரசாங்கங்களும் வணிக நிறுவனங்களும் இந்த உறுதி மொழிகளை எவ்வித தாமதமின்றி ஏற்று  அதனை உண்மையான பொருளாதார விளைவுகளாக மாற்ற வேண்டும்.
  • உலகளாவிய கையிருப்பு COP28 மாநாட்டின் மைய முடிவாகக் கருதப்படுகிறது.
  • இது பேச்சுவார்த்தையின் கீழ் இருந்த ஒவ்வொரு கூறுகளையும் கொண்டுள்ளதோடு, 2025 ஆம் ஆண்டளவில் வலுவான காலநிலைச் செயல் திட்டங்களை உருவாக்க வேண்டி அந்த நாடுகளால் இப்போது பயன்படுத்தப்படலாம்.
  • புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த, 2019 ஆம் ஆண்டு அளவைக் காட்டிலும், 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளாவியப் பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் 43% குறைக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கும் ஒரு அறிவியலை உலகளாவியக் கையிருப்பானது அங்கீகரிக்கிறது.
  • ஆனால் பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை அடையும் போது உறுப்பு நாடுகள் அப்பாதையினை விட்டு விலகியதாக அது குறிப்பிடுகிறது.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை மும்மடங்காக உயர்த்துவதோடு எரிசக்தி திறன் மேம்பாடுகளை இரட்டிப்பாக்கும் நோக்கத்தினை அடைவதற்கு உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகளாவிய கையிருப்பானது அழைப்பு விடுக்கிறது.

தணிக்கப் படாத நிலக்கரிப் பயன்பாட்டுக் குறைப்பு

  • உள்ளமைக்கப்பட்ட கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு வசதி இல்லாமல் புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களைத் திறக்க முடியாது என்று நிபந்தனைகள் விதிப்பதற்கான நடவடிக்கை இதில் எடுக்கப்பட்டது.
  • ஆனால் இதற்கு இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிற நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

கடன், இயற்கை ஆற்றல் மற்றும் காலநிலை பற்றிய உலகளாவிய நிபுணர் குழு மதிப்பாய்வு

  • கென்யா, கொலம்பியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் கடன், இயற்கை மற்றும் காலநிலை குறித்த உலகளாவிய நிபுணர் மதிப்பாய்வினைக் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டிற்கான உறுப்பினர்களின் 28 வது மாநாட்டில் (COP 28) தொடங்கினர்.
  • இந்த ஆண்டு ஜூன் மாதம் பாரீஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான உச்சி மாநாட்டில் இது முதன்முதலில் முன்மொழியப் பட்டது.
  • இந்த அறிவிப்பானது காலநிலை மாற்றத்தின் பின்னணியில் கடன் துயரத்தின் பிரச்சினையைக் கவனத்தில் கொள்ளச் செய்வதற்கான இயக்கத்தினைச் சமிக்ஞை செய்கிறது.
  • கென்யா, கொலம்பியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து நிதிக் கட்டமைப்பினை மறுபரிசீலனை செய்வதற்காக ஒரு சர்வதேச நிபுணர்கள் குழுவைத் தொடங்கியுள்ளன.
  • இந்த நிபுணர்கள் கடன், காலநிலை மற்றும் இயற்கையை மதிப்பாய்வு செய்வார்கள்.
  • இந்த மதிப்பாய்வு பாரீஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான உச்சி மாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட மக்கள் மற்றும் புவிக் கிரகத்திற்கான பாரீஸ் ஒப்பந்தத்தில் அடங்கிய பகுதிகளின் ஒரு தொடர்ச்சியாகும்.
  • குறைந்த கார்பன் பொருளாதார வளர்ச்சிக்கான கட்டமைப்பில் பொருளாதார மாற்றத்தினை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

Watsonx.ai

  • சமீபத்தில் நடைபெற்ற COP28 உச்சி மாநாட்டில் NASA மற்றும் IBM ஆகியவை watsonx.ai எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை பற்றிய ஒரு அறிவிப்பினை வெளியிட்டன.
  • இது திறந்த அல்லது காப்புரிமை இல்லாத மூலம் கொண்ட AI மூலம் செயல்படக் கூடிய இயங்குதளமான Hugging Space என்ற தளத்தில் கிடைக்கும்.
  • Watsonx.ai என்பது IBM மற்றும் NASA இணைந்து உருவாக்கிய ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியாகும்.
  • விண்வெளியில் இருந்து பூமியைக் கண்காணிக்கவும், சுற்றுச்சூழல் மாற்றங்களை அளவிடவும் பயனர்களுக்கு இது உதவும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.
  • எதிர்காலத்தைப் பற்றிய கணிப்புகளைச் செய்யும் போது அந்த மாற்றங்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளனவா என்பதை இக்கருவி மூலம் அறியலாம்.
  • இந்த கருவியின் மாதிரியானது பயன்படுத்த மிகவும் எளிமையானதாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

  • இதில், ஒரு பயனர் ஒரு இடத்தையும் தேதியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • மேலும் இந்த மாதிரியானது வெள்ளநீரில் ஏற்படும் மாற்றங்கள், மீண்டும் காடு வளர்ப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் மற்றும் பிற தொடர்புடைய காரணிகளை எடுத்துக்காட்டும்.
  • Watsonx.ai பணி அமைப்பானது ஒரு அடித்தள மாதிரி அடிப்படையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
  • இது வகைப்படுத்தப்படாத தரவுகளின் பரந்த தொகுப்பின் மீது அந்த மாதிரியை அனுமதிக்கும் வகையில் அதற்குப் பயிற்சியளிக்கப்பட்டது
  • இந்த மாதிரியானது ஒரு சூழ்நிலையைப் பற்றிய தகவலை வேறொரு சூழ்நிலைக்குப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
  • நாசா தரவுத்தொகுப்புகளை வழங்குகிற நிலையில் ஐபிஎம் அவற்றை விளக்குவதற்கு அடித்தள மாதிரியை உருவாக்கி வழங்கியுள்ளது.
  • காலப்போக்கில் வெளிவரும் காட்சித் தொடர்களைப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக இந்த மாதிரியைப் பயிற்றுவிப்பதற்காக, விஞ்ஞானிகள் ஒவ்வொரு படத்திலும் வெற்றுப் பகுதிகளை நிரப்பி, இந்த மாதிரியை மீண்டும் ஒன்றாக இணைக்கச் செய்தார்கள்.

2024 ஆம் ஆண்டிற்கான ஐநா காலநிலைப் பேச்சு வார்த்தைகள் அஜர்பைஜானில்

  • அஜர்பைஜான் ஒரு ஆசிய நாடு ஆகும்.
  • சமீபத்திய அறிவிப்பின்படி, COP-29 காலநிலை மாற்ற உச்சி மாநாடு அஜர்பைஜானில் நடைபெற உள்ளது.
  • COP-28 காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • COP-29 உச்சி மாநாட்டினை நடத்துவதற்கான வேட்புமனுவினை ஆர்மீனியா திரும்பப் பெற்ற பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • COP என்றால் உறுப்பு நாடுகளின் மாநாடு ஆகும்.
  • COP ஆனது காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டால் (UNFCCC) ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.
  • இந்த மாநாட்டின் செயலகமானது ஜெர்மனி நாட்டின் பான் நகரில் அமைந்துள்ளது.
  • முதல் COP உச்சி மாநாடானது, 1995 ஆம் ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற்றது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்