TNPSC Thervupettagam

தமிழ்நாடு வளர்ச்சி மாதிரி

February 28 , 2026 10 days 350 0
  • மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற பிற மாநிலங்களைப் போலல்லாமல், பொருளாதார நடவடிக்கைகள் ஓரிரு நகரங்களில் குவிந்துள்ள நிலையில், தமிழ்நாடு பரவலான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
  • சென்னையைத் தவிர, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், திருச்சி, வேலூர் மற்றும் சேலம் போன்ற பிற நகர மையங்கள் அதன் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குவதோடு, நகர்ப்புற-கிராமப்புற பிளவைத் தணிக்கவும் அவை உதவுகின்றன.
  • மேற்கு மாவட்டமான திருப்பூரில் ஏராளமான நூற்பு ஆலைகள் அமைந்துள்ள இடத்திலிருந்து அதன் செயல்பாட்டின் பரவலைக் காணலாம்.
  • இது 2023-24 ஆம் ஆண்டில் நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியில் 55% ஆக, ₹30,690 கோடியாக இருந்தது என்பதோடு இது ஆறு லட்சம் பேருக்கு வேலைகளை வழங்கியது.
  • தெற்கு மாவட்டமான விருதுநகரில் காலண்டர் மற்றும் பட்டாசு தயாரிக்கும் அலகுகள், மத்திய மாவட்டமான பெரம்பலூர், மற்றும் திருநெல்வேலியில் பீடி தயாரித்தல் மற்றும் பாய் நெசவு ஆகியவையும் இந்த உண்மைக்குச் சான்றாகும்.
  • 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு நாட்டிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகும் என்பதோடு இதன் மக்கள்தொகையில் 50% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.
  • உரிம ராஜ்ஜியத்தின்’ போது உற்பத்தியில் உறுதியான அடித்தளத்தை உருவாக்குவதில் இந்த மாநிலம் முதல்-மூவர் சாதகத்தைப் பெற்றது மட்டுமல்லாமல், 1990க்குப் பிந்தைய ‘பொருளாதாரச் சீர்திருத்தங்கள்’ சகாப்தத்தில் தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் IT சார்ந்த சேவைகளை (ITES) எடுத்துக் கொள்வதிலும் இந்த மாநிலம் மற்றவர்களை விட பின்தங்கவில்லை.
  • 2024 ஆம் ஆண்டில் நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) இந்தியா குறியீடு 2023-24 என்பதில், தமிழ்நாடு முன்னணியில் இருந்தது என்பதோடு, இது மாநிலத்தின் அர்ப்பணிப்பு முயற்சிகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான விரிவான கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது.
  • இந்த விவாததிற்குரிய பதிப்பில் தமிழ்நாட்டிற்கான கூட்டு மதிப்பெண் 78 ஆக உயர்ந்தது என்பதோடு இது 2018 இல் 66 ஆக இருந்தது என்ற நிலையில் இது குறிப்பிடத்தக்க உயர்வு ஆகும்.
  • குறைந்த குழந்தை இறப்பு மற்றும் குறைந்த பிறப்பு விகிதத்தில் இந்த மாநிலம் இரண்டாவது இடத்திலும், சுகாதாரக் குறியீட்டில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
  • இது மதிய உணவு திட்டம் போன்ற புதுமையான நலத்திட்டங்களுக்கு பெயர் பெற்றது என்பதோடு அது 1956 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டது.
  • முதியோர் ஓய்வூதியத் திட்டம் இந்த மாநிலத்தில் ஏப்ரல் 1962 இல் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதோடு முந்தைய பதிப்புகளை விட இதில் மேம்பாடுகள் செய்யப்பட்டன.
  • சுதந்திரம் அடைந்த இரண்டு ஆண்டுகளுக்குள், நீண்ட கால நிதியுதவியைக் கையாள தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகத்தை (TIIC) இது அமைத்தது.
  • 1954 முதல் 1963 வரை மாநில முதலமைச்சராக இருந்த கே. காமராஜின் காலத்தில் TIIC இன் இருப்பு நடைமுறைக்கு வந்தது.
  • தனியார் நிறுவனங்களின் பங்கு மூலதனத்தில் பங்கேற்க அவர் அந்த நிறுவனத்தை அனுமதித்தார்.
  • 1980களின் நடுப்பகுதியில், அரசு உயர்கல்வியை தனியார் துறைக்கு திறந்தது என்பது, பல பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க உதவியது.
  • தற்போதைய நிலவரப்படி, 22 சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகள், நான்கு தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட 13 கல்லூரிகள் உள்ளன.
  • பொறியியல் மற்றும் கட்டிடக்கலைத் துறையில், 11 அரசு கல்லூரிகளைத் தவிர, 429 சுயநிதி கல்லூரிகளும் இங்கு உள்ளன.
  • இந்தியாவின் நிலப்பரப்பில் 4% மற்றும் நாட்டின் மக்கள் தொகையில் 6% கொண்ட தமிழ்நாடு, 2024-25 ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.21% பங்களித்தது என்பதோடு, மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக இது இரண்டாவது இடத்தில் இருந்தது.
  • நிலையான விலையில் (2011-12 தொடர்) அதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) சுமார் ₹17.23 லட்சம் கோடியை எட்டியது என்பதோடு, இது முந்தைய ஆண்டை விட 11.19% உண்மையான பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
  • உண்மையில், 14 வருட இடைவெளிக்குப் பிறகு இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தைத் தவிர, குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே.
  • பொதுவாக, இந்த மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதன்மை (விவசாயம் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள்), இரண்டாம் நிலை (தொழில்) மற்றும் மூன்றாம் நிலை (சேவைகள்) துறைகளின் பங்குகள் முறையே 13%, 34% மற்றும் 53% ஆகும்.
  • சுதந்திரத்தின் போது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் அடிப்படையில் விவசாயம் சார்ந்ததாக இருந்தது.
  • 1924 ஆம் ஆண்டு முதல் இருந்த காவிரி பிரச்சனையில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
  • 1924 ஆம் ஆண்டில், கீழ் நதிக்கரை மாநிலமான தமிழ்நாட்டிற்கும், மேல் நதிக்கரை மாநிலமான கர்நாடகாவிற்கும் இடையே மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • முந்தைய (தமிழ்நாடு) பாசனப் பரப்பளவு சுமார் 15 லட்சம் ஏக்கர் என்ற அதே நேரத்தில் பிந்தைய (கர்நாடகா) பரப்பளவு அதில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை.
  • இதன் டெல்டா பகுதி தெற்கின் நெற்களஞ்சியமாகக் கருதப்படுகிறது.
  • இது மாநிலத்தின் நெல் சாகுபடியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
  • மொத்த 52 லட்சம் ஏக்கரில் 18 லட்சம் ஏக்கர் இது.
  • தமிழ்நாட்டில் விவசாயிகளின் முதன்மைப் பயிராக நெல் உள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
  • சுதந்திரத்திற்குப் பிந்தைய உடனடி காலத்தில்தான், மேற்குப் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளான கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு அதிக நீர்ப்பாசனத் திட்டங்கள் இல்லை என்பதை தமிழ்நாடு கண்டறிந்தது.
  • இது 1958 ஆம் ஆண்டு கேரளாவுடன் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைத் திருப்பி விடுவது தொடர்பாக மாநிலங்களுக்கு இடையேயான புரிந்துணர்வுக்குப் பிறகு பரம்பிக்குளம்-ஆலியார் திட்டம் (PAP) பிறக்க வழி வகுத்தது.
  • இந்தப் பகுதியைச் சேர்ந்தவரான சி. சுப்பிரமணியம் காங்கிரஸின் ஒரு உயர்ந்த நபராக இருந்தார்.
  • இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
  • மாநில அரசாங்கத்தில் நிதியமைச்சர் (1952-62) மற்றும் மைய அரசில் எஃகு, உணவு மற்றும் வேளாண்மை, திட்டமிடல் மற்றும் நிதியமைச்சர் (1962-67 மற்றும் 1971-77) ஆகிய இரண்டிலும் அவர் உயர் பதவிகளை வகித்தார்.
  • இப்போது மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் அடையாளமாகப் போற்றப்படும் PAP திட்டம் சுமார் 4.2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்கிறது.
  • இருப்பினும், எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை, கரும்பு, மக்காச்சோளம் மற்றும் நெல் ஆகியவற்றில் அகில இந்திய சராசரியை விட அதிக உற்பத்தித் திறன் கொண்ட முக்கிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு கருதப்படுகிறது.
  • இது மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையால் வெளியிடப்பட்ட வேளாண் புள்ளி விவரங்களின் தகவல் (2023) படி உள்ளது.
  • இந்த மாநிலம் அதிக அளவில் பருத்தியை உற்பத்தி செய்யவில்லை என்றாலும், இது அதிக எண்ணிக்கையிலான நூற்பு ஆலைகளைக் கொண்டுள்ளது.
  • 1950களில் மெட்ராஸ் ஒரு இருண்ட விவசாய மாகாணமாகக் கருதப்பட்டது என்பதோடு இதன் மின்சாரம், மூலதனம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சிறிய அளவில் இருந்தன.
  • இதன் மாகாண நிர்வாகத்திலும் தொழில் முனைவோருக்கான பற்றாக்குறை இருந்தது.
  • [ஏப்ரல் 1953 இல்] மூடப்பட்டுக் கொண்டிருந்த மெட்ராஸ் டிராம்வேஸை ரூ. 19 லட்சம் வரை குறைந்த தொகைக்கு இது வாங்க மறுத்து விட்டது.
  • இன்று, தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (TANSIDCO) கிட்டத்தட்ட 8,880 ஏக்கர் பரப்பளவில் 135 தொழில்துறை எஸ்டேட்களைப் பராமரிக்கிறது.
  • சிறு குறு தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இக்கள்) மத்திய எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் உதயம் இணைய தளத்தில் அவை தங்களைப் பதிவு செய்துள்ளன
  • எம்எஸ்எம்இக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, சுமார் 33.6 லட்சம் பேர் அதில் உள்ளனர் என்பதோடு அவர்களில் சுமார் 70% பேர் சேவைகளில் ஈடுபட்டுள்ளனர்.
  • தமிழ்நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சி மாதிரியின் அறிகுறியாக, எம்எஸ்எம் தொழில்முனைவோரில் 30% பெண்கள்.
  • மார்ச் 31, 2022 நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) சுமார் 3.37 லட்சம் எம்எஸ்எம்இக்களை வைத்திருந்தனர் என்பதோடு இது தோராயமாக 40% ஆகும் என்ற நிலையில் பட்டியல் சாதியினர் (எஸ்சி) சுமார் 6%. என்ற அளவில் 50,908 யூனிட்களை வைத்திருந்தனர்.
  • தமிழ்நாடு நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலமாக மாறியுள்ளது என்பதோடு இதில் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் (39,700) உள்ளன என்ற நிலையில் இதில் 2.8 மில்லியன் மக்கள் பணி புரிகின்றனர்.
  • மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியில் இது முன்னணியில் உள்ளது என்பதோடு இது இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் 30%க்கும் அதிகமாக உள்ளது.
  • இம்மாநிலத்தின் மொத்த ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 2024-25 ஆம் ஆண்டில் இம்மாநிலத்தின் மொத்த ஏற்றுமதியின் அடிப்படையில், மதிப்பு சுமார் $52 பில்லியன் ஆகும்.
  • நாட்டின் முதல் ஹைட்ரஜன்-இயங்கும் ரயில் பெட்டி ஜூலை 2025 இல் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) சோதனை செய்யப்பட்டது.
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நெய்வேலியில் சுமார் 3,400 மெகாவாட் (MW) மின் அலகுகளைக் கொண்டுள்ளது.
  • அனைத்து எரிசக்தி மூலங்களிலிருந்தும் இம்மாநிலத்தின் மொத்த நிறுவப்பட்ட மின்சார திறன் 2024-25 ஆம் ஆண்டில் 40 GW ஐ நெருங்கி இருந்தது.
  • இதில் வழக்கமான ஆதாரங்கள் 16.7 GW மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், 23 GW ஆகும்.
  • காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக இருக்கும் இந்த மாநிலத்தின் நிறுவப்பட்ட காற்றாலை திறன் 9.3 GW ஆகவும், சூரிய சக்தி 10 GW ஆகவும் இருந்தது.
  • தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் சுமார் 30.44 மில்லியன் நுகர்வோரைக் கொண்டுள்ளது.
  • மற்ற மாநிலங்களைப் போலவே, சேவைத் துறையும் தமிழ்நாட்டின் மொத்த மாநில மதிப்புக் கூட்டலை (GSVA) இயக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • 2024-25 ஆம் ஆண்டில், சேவைகள் நிலையான விலையில் ₹8.13 லட்சம் கோடியாக (அடிப்படை ஆண்டு: 2011-12) இருந்தன என்பதோடு இது தமிழ்நாட்டின் மொத்த GSVA இல் சுமார் 53% என்ற அளவிற்குப் பங்களித்தது.
  • மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவிற்கு அடுத்தபடியாக, இந்த ஏற்றுமதிப் பிரிவில் 2019-20 ஆம் ஆண்டில் ₹46,704 கோடியிலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் ₹73,969 கோடியாக நிலையான அதிகரிப்பை இது கண்டது.
  • இது தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வின் படி இருந்தது.
  • கடன்-வைப்பு விகிதம் (CDR) அதிகமாக உள்ள கடன்களுடன், இந்த மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகளின் அதிகரிப்பு அளவைக் காணலாம்.
  • 2023-24 ஆம் ஆண்டில், தமிழ்நாடு ₹15,82,851 கோடி கடன்களை வழங்கியதாகவும், ₹13,44,553 கோடி வைப்புத் தொகையைப் பெற்றதாகவும் கணக்கெடுப்பு சுட்டிக் காட்டுகிறது.
  • இயற்கையாகவே, CDR அடிப்படையில் இது முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாகும்.
  • சாலைத் துறையைப் பொறுத்தவரை, இம்மாநிலத்தின் மொத்த சாலைகளின் நீளம் 74,955 கி.மீ ஆகும் என்பதோடு இதில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 6,805 கி.மீ ஆகும்.
  • தமிழ்நாட்டில் சுமார் 130 உலகளாவிய ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் இருப்பது தமிழ்நாட்டின் அரசியல், நிர்வாக மற்றும் சமூகச் சூழலுக்கு ஒரு பாராட்டு ஆகும்.
  • நாட்டின் வாகனம் மற்றும் வாகன உதிரிபாக ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ($6.8 பில்லியன்) இந்த மாநிலத்திலிருந்தே வருகிறது.
  • நாட்டின் பயணிகள் கார்களில் 25% என்ற அளவையும் மற்றும் இரு சக்கர வாகனங்களில் 36% என்ற அளவையும் இம்மாநிலம் உற்பத்தி செய்கிறது.
  • இருப்பினும், மாநிலம் பொருளாதாரத்தின் மூன்று பரந்த துறைகளிலும் பல சவால்களை எதிர்கொள்கிறது.
  • பொருளாதார ஆய்வறிக்கை இந்தச் சவால்களில் சிலவற்றை - அதாவது, காலநிலை மாற்றம், மக்கள்தொகை மாற்றங்கள், தொழில்நுட்ப சீர்குலைவுகள் மற்றும் மாறிவரும் வேலைவாய்ப்பு சூழ்நிலைகள் - படம் பிடித்து காட்டுகிறது.
  • பிராந்தியங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு இங்கு குறிப்பாக வெளிப்படையானது.
  • இந்த மாநிலத்தின் ஒட்டு மொத்த தனிநபர் வருமானம் ₹2.78 லட்சம் (2022-23) தேசிய சராசரியான ₹1.69 லட்சத்தை விட அதிகமாக இருந்தாலும், மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் இந்த மாநிலத்தின் சராசரியை விட குறைவான தனிநபர் வருமானத்தைக் கொண்டுள்ளன.
  • இந்த மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியைப் பரப்ப, கிராமப்புறத் தொழில்முனைவோரை வளர்ப்பதில் தமிழ்நாடு கவனம் செலுத்த வேண்டும்.
  • இம்மாநிலத்தின் நீண்ட கடற்கரை 1,076 கி.மீ.க்கு நீண்டுள்ளது என்பதோடு மேலும் பயனுள்ள உள்நாட்டு நீர் வளங்களின் பரப்பளவு 3.85 லட்சம் ஹெக்டேருக்கு மேல் உள்ளது.
  • பால் துறையில், பால் உற்பத்தியில் அகில இந்திய அளவில் மாநிலம் 11வது இடத்தில் இருப்பதால், இங்கு முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன.
  • மாநிலத்தின் பொருளாதாரத்தில் 18.8% மற்றும் மக்கள் தொகையில் 20.5% என்ற அளவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தெற்கு மாவட்டங்கள், மற்ற மாவட்டங்களை விட பின்தங்கிய நிலையில் உள்ளன.
  • இந்தியாவில் பெண்களுக்கான மிக உயர்ந்த தொழிலாளர் படை பங்கேற்பு விகிதங்களில் (LFPR) ஒன்றாக இது இருந்தாலும், இந்த விகிதத்தை அதிகரிக்க இன்னும் கணிசமான வாய்ப்புகள் உள்ளன என்று கணக்கெடுப்பு சுட்டிக் காட்டுகிறது.
  • உயர்நிலைக் கல்வியில் பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம் நாட்டிலேயே மிக உயர்ந்த ஒன்றாகும், ஆனால் அத்தகைய திறமையான பெண்களின் பங்கேற்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்