இது நிதித் தொழில்நுட்ப தொழில் வல்லுநர்கள், ஆர்வலர்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள், தொழில்துறைத் தலைவர்கள், புத்தாக்க நிறுவன சமூகத்தினர் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைப்பதற்கான இத்தகைய முதல் முயற்சியாகும்.
இந்தப் பொதுவான தளத்தில் தொழில் வல்லுநர்கள், தலைவர்கள் மற்றும் புத்தாக்க நிறுவன சமூகத்தினர் ஒன்றிணைந்து கருத்துகளைப் பரிமாறிப் புதுமைகளைப் படைக்கின்றன.
இது நிதி ஆயோக் நிறுவனத்தினால் தொடங்கப்பட்டது.
இந்த உச்சி மாநாட்டின் முக்கிய சிறப்பம்சமானது இந்தியாவின் மிகப்பெரிய நிதித் தொழில்நுட்ப ஹேக்கத்தான் ஆகும்.
நிஜ உலகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்ட தனிப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் புத்தாக்க நிறுவன சமூகங்களுக்கு முக்கிய யோசனைகளை வழங்குவதற்கு இது ஒரு வாய்ப்பினை வழங்கும்.
நிதி ஆயோக்கின் ஃபின்டெக் மாதத்தின் கருத்துரு. ‘OPEN’ என்பதாகும்.