TNPSC Thervupettagam

அகத்தியமலை பழங்குடியினர் வெளியேற்றப் பிரச்சினை

August 13 , 2026 6 days 150 0
  • தமிழ்நாட்டின் அகத்தியமலை உயிர்க்கோளக் காப்பகத்தில் (ABR) உள்ள வன நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி வனத்துறை ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  • மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் (CEC) அறிக்கைகளின் அடிப்படையில், ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேற்றவும், பொருந்தக்கூடிய இடங்களில் மறுவாழ்வு அளிக்கவும் மற்றும் சூழலியல் மறுசீரமைப்பு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • வன உரிமைகள் சட்டம் (FRA) 2006-இன் கீழ், பரிந்துரைக்கப்பட்ட சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்பட்டு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 13-க்கு முன்னர் வன நிலங்களை ஆக்கிரமித்த பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளின் வன உரிமைகளை அங்கீகரிக்கிறது.
  • வன உரிமைகள் சட்டமானது கிராம சபைகள் மூலம் உரிமை கோரல்களைச் சரி பார்க்கக் கோருகிறது, மேலும் 2005 ஆம் ஆண்டுக்கு முந்தைய மூன்று தலைமுறைகளாக (75 ஆண்டுகள்) ஆக்கிரமித்திருப்பதை மற்ற பாரம்பரிய வனவாசிகள் நிரூபிக்க வேண்டியதில்லை.
  • 2020 ஆம் ஆண்டின் பதிவேடுகளின் அடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 4,595 ஆக்கிரமிப்பாளர்கள் 5,071.2 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.
  • அகத்தியமலை உயிர்க்கோளக் காப்பகம் தமிழ்நாடு மற்றும் கேரளா முழுவதும் சுமார் 3,500 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது, இதில் பல புலிகள் காப்பகங்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களும் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்