25வது அகில இந்திய முக்கிய துறைமுக கலாச்சார நிகழ்ச்சி 2025–26 ஆனது ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்வை பாரதீப் துறைமுக ஆணையம் (PPA) முக்கிய துறைமுக விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தது.
சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக ஆணையம் இந்த நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த சாம்பியனாக அறிவிக்கப்பட்டது என்ற நிலையில்இதில் மும்பை துறைமுக ஆணையம் இரண்டாம் இடத்தையும், தீனதயாள் மற்றும் கொச்சி துறைமுக ஆணையங்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
இந்த நிகழ்ச்சி இந்தியாவின் துறைமுக ஊழியர்களிடையே கலாச்சாரப் பரிமாற்றம், ஒற்றுமை மற்றும் தோழமையை ஊக்குவிக்கிறது, மேலும் கடல்சார் துறையில் தேசிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துகிறது.