இந்திய அஞ்சல் துறையானது, ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் அமெரிக்காவிற்கான பெரும்பாலான அஞ்சல் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.
800 அமெரிக்க டாலர்கள் வரை மதிப்புள்ள பொருட்களுக்கான வரி விலக்கை நீக்கும் அமெரிக்க நிர்வாக உத்தரவு எண் 14324 என்பதைப் பின்பற்றி இந்த இடை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
100 அமெரிக்க டாலர்கள் வரை மதிப்புள்ளப் பரிசுகளைத் தவிர, அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் ஏற்றுமதிகளுக்கும் தற்போது சுங்க வரிகள் விதிக்கப்படும்.
அமெரிக்கச் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் விதிப்படி, சேவை நிறுவனங்கள் வரிகளை வசூலிக்க வேண்டும், ஆனால் தெளிவற்ற வழிகாட்டுதல்கள் விமான நிறுவனங்கள் அஞ்சல் சார்ந்த சரக்குகளை மறுக்கக் காரணமாக அமைந்தன.
சிக்கலைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள காலத்தில் அஞ்சல் துறையானது கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட பரிசுகளைத் தொடர்ந்து ஏற்கும்.