TNPSC Thervupettagam

அடல் ஓய்வூதியத் திட்டம்

May 14 , 2020 1837 days 837 0
  • 2015 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதி அன்று அடல் ஓய்வூதியத் திட்டமானது தொடங்கப் பட்டது.
  • இது தனது 5 ஆண்டு காலச் செயல்பாடுகளை நிறைவு செய்துள்ளது.
  • இந்தத் திட்டமானது சுவாலம்பன் என்ற திட்டத்திற்குப் பதிலாக கொண்டு வரப் பட்டுள்ளது.
  • இது முதியோர்களின் வருமானப் பாதுகாப்பை அளிப்பதற்காகத் தொடங்கப் பட்டதாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட எந்தவொரு இந்தியக் குடிமக்களாலும் பதிவு செய்ய முடியும்.
  • இது 60 வயதை எட்டியவுடன் ரூ. 1000 முதல் ரூ. 5000 வரையிலான குறைந்தபட்ச உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தை அளிக்கின்றது.
  • இது மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தினால் (PFRDA - Pension Fund Regulatory and Development Authority) செயல்படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்