அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ICESat-2 எனும் செயற்கைக் கோளானது சமீபத்தில் அண்டார்டிக் உருகுநீர் ஏரிகளை கண்டறிந்துள்ளது.
பனிப்பாறை நிபுணரான ஹெலென் அமென்டா ஃபிரிக்கர் 2007 ஆம் ஆண்டில், ஒன்றோடொன்று இணைந்த ஒரு ஏரியானது அண்டார்டிக்காவின் அடர்ந்த பனி படிவுகளுக்குக் கீழே மறைந்துள்ளதைக் கண்டறிந்தார்.
இவர் இதற்காக நாசாவின் ICEsat செயற்கைக்கோளின் தரவுகளைப் பயன்படுத்தி உள்ளார்.
ICEsat 2 என்ற செயற்கைக் கோள் 2018 ஆம் ஆண்டில் நாசாவினால் விண்ணில் ஏவப் பட்டது.
ICEsat 2 செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி ஃபிரிக்கர் தற்போது அண்டார்டிகா பனிப்பாறைகளுக்கு அடியிலுள்ள இரண்டு புதிய உருகுநீர் ஏரிகளைக் கண்டறிந்துள்ளார்.