TNPSC Thervupettagam

அதிக வெப்பம் மற்றும் உணவு அமைப்புகள் குறித்த FAO-WMO அறிக்கை (2026)

July 14 , 2026 13 days 102 0
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் உலக வானிலை அமைப்பு (WMO) இணைந்து வெளியிட்ட அறிக்கையானது, உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அதிக வெப்பம் ஒரு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது என்பதை அடையாளம் கண்டுள்ளது.
  • 30°Cக்கும் அதிகமான வெப்பநிலையில் முக்கியப் பயிர்கள் மகசூல் இழப்பைச் சந்திக்கின்றன; ஒவ்வொரு 1°C வெப்பமயமாதலும் மக்காச்சோளத்தை 7.5%, சோயா பீனை 6.8% மற்றும் கோதுமையை 6% குறைக்கலாம்.
  • அதிகரித்து வரும் வெப்ப அழுத்தம் காரணமாக, 1961 ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய விவசாய மொத்த காரணி உற்பத்தித்திறன் (TFP) 21% குறைந்துள்ளது.
  • அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்ற நிலையில் இங்கு வெப்ப அலைகள் அரிசி உற்பத்தி மற்றும் விவசாயத் தொழிலாளர்களைப் பாதிக்கின்றன; வெப்ப அழுத்தம் காரணமாக 2024 ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் 648 வேலை நேரங்களை (54 நாட்கள்) இழந்துள்ளனர்.
  • அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் கடல் வெப்ப அலைகள் காரணமாக கால்நடைகள், மீன்வளம், காடுகள் மற்றும் பழத்தோட்டங்களுக்கு ஏற்படும் அபாயங்களை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்