இந்திய அரசானது, "அன்ன-சக்ரா" விநியோகச் சங்கிலி மேம்பாட்டுச் செயற்கருவியை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 31 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் (UT) 30 களில் செயல்படுத்தியுள்ளது.
இது 4.37 லட்சம் நியாய விலைக் கடைகள் மற்றும் 6700 கிடங்குகளை உள்ளடக்கிய வகையில் பிரதான் மந்திரி கதி சக்தி மற்றும் இரயில்வேயின் FOIS தளத்துடன் ஒருங்கிணைக்கிறது.
இந்த முன்னெடுப்பானது தொழில்நுட்பம் சார்ந்த தளவாடங்களைப் பயன்படுத்திப் பொது விநியோக முறையை (PDS) நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
போக்குவரத்துச் செலவினக் குறைப்பு மூலம் இந்த முன்னெடுப்பு ஆண்டுதோறும் 250 கோடி ரூபாயை மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.