மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகமானது அபாயகரமான மற்றும் இதர கழிவுகளுக்கான (மேலாண்மை மற்றும் எல்லை தாண்டிய இயக்கம்) விதிகள் 2016-ஐ திருத்தியுள்ளது.
இது நாட்டில் அபாயகரமான கழிவுகளின் சுற்றுச்சூழல்சார் சிறந்த மேலாண்மைக்கான செயல்படுத்துதலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் திட நெகிழிக் கழிவுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
பட்டு ஏற்றுமதிக்கு MoEFCCயிடமிருந்து (Ministry of Environment, Forest and Climate Change) தேவையான அனுமதியைப் பெறுவதிலிருந்து தற்பொழுது விலக்கு அளிக்கப்படும்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திப் பொருட்கள் மற்றும் பழுதடைந்த மின் மற்றும் மின்சாரப் பொருட்கள் ஆகியவற்றின் தலைகீழ் இறக்குமதிகளை MoEFCCயிடமிருந்து முன் அனுமதி பெறாமல் ஒரு வருட காலத்திற்குள் ஏற்றுமதி செய்ய முடியும்.