அமலாக்க இயக்குநரகமானது (ED) 1956 ஆம் ஆண்டு மே 1 அன்று நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறையின் கீழ் நிறுவப்பட்டது.
ED என்பது ஒரு அரசியலமைப்பு சாராத மற்றும் சட்டம் சாராத நிர்வாக அமைப்பாகும், நிதி குற்றங்களை விசாரணை செய்யும் இது மற்றும் இந்தியா முழுவதும் பொருளாதாரச் சட்டங்களை அமல்படுத்துகிறது.
இது முக்கியமாக பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002 மற்றும் வெளிநாட்டு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA), 1999 ஆகியவற்றின் கீழ் செயல் படுகிறது.
தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் (FEOA), 2018-இன் கீழ், விசாரணையைத் தவிர்ப்பதற்காக இந்தியாவிலிருந்து தப்பிச் செல்லும் பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய ED-க்கு அதிகாரம் உள்ளது.
ED-இன் தலைவராக அமலாக்கத் துறை இயக்குநர் செயல்படுகிறார், மேலும் இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளதுடன், நாடு முழுவதும் 10 மண்டல அலுவலகங்கள் மற்றும் 11 துணை மண்டல அலுவலகங்கள் உள்ளன.