நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த்தின் தலைமையில் இந்திய அரசானது ஓர் அதிகாரம் பெற்ற குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவானது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கோவிட்-19 தொடர்பான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்தக் குழுவானது மூன்று பங்குதாரர் அமைப்புகளைக் கொண்டுள்ளது.
ஐ.நா. முகமையகங்கள், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் உலக வங்கி ஆகியோர் முதல் குழுவின் பங்குதாரர்கள் ஆவர்.
இரண்டாவது குழுவில் குடிமைச் சமூக அமைப்புகளும், மூன்றாவது குழுவில் FICCI, CII, NASSCOM, ASSSOCHAM போன்ற தனியார் நிறுவன அமைப்புகளும் உள்ளன.