முறைப்படுத்தப்படாத வைப்புகள் திட்ட மசோதா 2019-க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் சட்டவிரோத வைப்பு நடவடிக்கை அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்த மசோதா உதவும்.
மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் விவகாரங்கள்
மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் விவகாரங்கள் திருத்த மசோதா 2019 -க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவானது 1956 ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் விவகாரங்கள் சட்டத்தை திருத்தம் செய்ய முயல்கிறது.
இந்த மசோதாவானது தீர்ப்பளிப்பதற்கான காலக்கெடுவை தீவிரமாக்குவதற்காக வெவ்வேறு அமர்வுகளைக் கொண்ட ஒரே தீர்ப்பாயத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிராமப்புற சாலைகள்
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனாவின் (BMGSY) மூன்றாவது கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் கீழ் கிராமப்புறங்களில் 1.25 லட்சம் கி.மீ. சாலைகளில் மேம்படுத்தப்படும்.
ரயில்வே பாதுகாப்புப் படை
மத்திய அமைச்சரவையானது ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குரூப் – A அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் மத்திய சேமக் காவல்படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத் எல்லைக் காவல்படை மற்றும் சாஸ்திர சீமா பால் ஆகியவற்றிற்கும் இதே சலுகை வழங்கப்பட்டன.
சிறார் வன்கொடுமை மரண தண்டனை
குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்துப் பாதுகாக்கும் சட்டம் 2012-ஐ திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவானது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டணையை வழங்குகிறது.
திருநங்கைகளுக்கு ஆதரவு
திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திருநங்கைகளுக்கு சமூக, பொருளாதார மற்றும் கல்வி அதிகாரங்களை அளிக்க இந்த மசோதா முயல்கிறது.
இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புதலானது தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் 100 நாட்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.
தொழில் ரீதியான பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைகள் மசோதா - 2019
தொழில் ரீதியான பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிநிலைகள் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவானது தொழில் ரீதியான பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிநிலைகள் மீதான 13 தொழிலாளர் சட்டங்களை ஒரே சட்டமாக இணைக்க முயல்கிறது.
இது 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.