தற்பொழுதைய மத்திய உள்துறை செயலாளரான ராஜிவ் கௌபா அடுத்த அமைச்சரவைச் செயலாளராக (கேபினெட்) இரண்டு ஆண்டு காலத்திற்கு (2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல்) நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் காஷ்மீரை இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரித்த ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்திற்கு முக்கியப் பங்காற்றியவர் கௌபா ஆவார்.
பாதுகாப்புத் துறையின் செயலாளராக அஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு உற்பத்தித் துறையின் செயலாளராக சுபாஷ் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்று, லோக் பால் அமைப்பின் செயலாளராக பிரிஜ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.