அமைதிக்கான பல்வகைமை மற்றும் அரசியல் செயலாண்மை திறனுக்கான சர்வதேச தினம்
April 25 , 2019 2699 days 815 0
ஏப்ரல் 24, 2019 ஆம் ஆண்டு அதிகாரப் பூர்வமான முதல் அமைதிக்கான பன்முகத் தன்மை மற்றும் அரசியல் செயலாண்மைத் திறனுக்கான சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது.
இது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று ஐ.நா பொதுச் சபை தீர்மானத்தினால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்த நாளானது, கல்வி மற்றும் பொது விழிப்புணர்வை வளர்க்கும் நடவடிக்கைகள் வழியாக அமைதிக்கான பன்முகத் தன்மை மற்றும் அரசியல் செயலாண்மைத் திறன்களின் நன்மைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.