TNPSC Thervupettagam

அரசின் உதவித் தொகை பெறும் உரிமை – ஒரு அடிப்படை உரிமை அல்ல

September 30 , 2021 1391 days 535 0
  • ஒரு நிறுவனத்தின் (பெரும்பான்மை (அ) சிறுபான்மை நிறுவனம் எதுவாயினும்) மூலம் அரசு உதவித் தொகை பெறும் உரிமையானது ஒரு அடிப்படை உரிமை அல்ல என்றும், அது ஒரு கொள்கை சார்ந்த விசயம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
  • வழங்கப்படும் உதவித் தொகையானது அதனைப் பெறும் நிறுவனங்கள் இணங்க வேண்டிய நிபந்தனைகளைக் கொண்டது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
  • அந்த நிபந்தனைகளை ஒரு நிறுவனம் ஏற்க விரும்பவில்லை எனில், அது உதவித் தொகையை நிராகரிக்கலாமே தவிர அந்த உதவித் தொகையினை அதன் சொந்த நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்று கூற இயலாது.
  • உதவித் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக அரசு ஒரு கொள்கையைத் தயாரித்தால், ஒரு நிறுவனம் அதைத் தனது உரிமை எனக் கோரி வாதிட முடியாது.
  • சட்டப்பிரிவு 30(2) என்பதின் கீழ், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை வழங்கீட்டில், மதம் (அ) மொழிசார்ந்த சிறுபான்மையினர் நிர்வாகத்தின் கீழுள்ள எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் அரசு பாகுபாடு காட்டக் கூடாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்