TNPSC Thervupettagam

அரசியலமைப்பு (முதல் திருத்தம்) சட்டம், 1951ன் 75 ஆண்டுகள்

June 24 , 2026 9 days 172 0
  • 2026 ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று அரசியலமைப்பு (முதல் திருத்தம்) சட்டம், 1951 இன் 75வது ஆண்டு நிறைவு அனுசரிக்கப்பட்டது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து வெறும் 15 மாதங்களிலேயே, பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கீழ் 1951 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இது இயற்றப் பட்டது.
  • இந்தத் திருத்தம் பேச்சுரிமை, சமத்துவ விதிமுறைகள் மற்றும் சொத்துரிமைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது.
  • சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் (SEBCs), பட்டியலிடப்பட்ட சாதியினர் (SCs) மற்றும் பழங்குடியினருக்கு (STs) சிறப்பு சலுகைகளை அனுமதிக்க சரத்து 15(4) சேர்க்கப்பட்டது.
  • ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டங்கள் உட்பட நிலச் சீர்திருத்தச் சட்டங்களை நீதிப்புனராய்விலிருந்து பாதுகாப்பதற்காக, சரத்து 31A மற்றும் 31B சேர்க்கப்பட்டு, ஒன்பதாவது அட்டவணை உருவாக்கப்பட்டது.
  • அரசின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, வெளிநாடுகளுடனான நட்பு உறவுகள், கண்ணியம், ஒழுக்கம், நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு மற்றும் குற்றச் செயல்களைத் தூண்டுதல் ஆகியவற்றின் நலன் கருதி, சுதந்திரமான பேச்சுரிமைக்கு நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்க சரத்து 19(1)(a) திருத்தப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்