TNPSC Thervupettagam

அரசியலமைப்பு (125வது மசோதா)

February 13 , 2019 2308 days 656 0
  • வடகிழக்குப் பகுதியின் ஆறாவது பட்டியலில் உள்ள 10 தன்னாட்சி மன்றப் பகுதிகளின் நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களை அதிகப்படுத்திட வேண்டி அரசியலமைப்பு [125வது திருத்தம்] மசோதா ஒன்றை அரசு மாநிலங்களவையில் அறிமுகம் செய்திருக்கின்றது.
  • இந்த திருத்தம் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரு கோடி பழங்குடி மக்களுக்கு உதவிடும்.
  • இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்கள் கடைமட்ட நிலையில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம உள்ளாட்சி மன்றங்களை ஏற்படுத்தும்.
  • இந்த கிராம மன்றங்கள் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்கான திட்டங்களைத் தயாரித்திடும் வகையில் அதிகாரமளிக்கப்பட்டிருக்கும்.
  • நிதிக் குழு அவர்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களைப் பகிர்ந்திடுவது தொடர்பாக பரிந்துரைக்க அதிகாரமளிக்கப்பட்டிருக்கும்.
  • தன்னாட்சி மன்றங்கள் தற்போது, குறிப்பிட்ட திட்டங்களுக்காக மத்திய அமைச்சகங்களிடமிருந்து வரும் மானியங்களையும் மாநில அரசின் நிதிகளையும் நம்பியிருக்கின்றது.
  • இந்த திருத்தத்திற்கு ஒப்புதலளிக்கப்பட்டால் அது ஆறாவது பட்டியல் பகுதிகளான அசாம், மிசோரம், மேகாலயா மற்றும் திரிபுரா பகுதிகளில் உள்ள கிராம மற்றும் நகராட்சி மன்றங்களில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு என்று ஒதுக்கும்.
ஆறாவது பட்டியல்
  • அரசியலமைப்பின் ஆறாவது பட்டியல் நான்கு வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடியினரின் நிர்வாகத்தோடு தொடர்புடையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்