TNPSC Thervupettagam

அரசியலமைப்பு (126வது திருத்தம்) மசோதா, 2019

December 20 , 2019 1960 days 1037 0
  • இந்த மசோதாவானது மக்களவையில் மத்திய சட்ட மற்றும் நீதித் துறை அமைச்சரான திரு. ரவிசங்கர் பிரசாத் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த மசோதாவானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.
  • அரசியலமைப்பானது (பிரிவு 334) மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டமன்றங்களில், பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகியோருக்கு இடங்களை ஒதுக்குவதற்கும் ஆங்கிலோ - இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்வதற்கும் வழிவகை செய்கின்றது.
  • இந்த இட ஒதுக்கீட்டு விதிமுறையானது அரசியலமைப்பு இயற்றப்பட்டதிலிருந்து அடுத்த 70 ஆண்டு காலத்திற்கு வழங்கப் பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று காலாவதியாக இருக்கின்றது.
  • இந்த மசோதாவானது பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை 2030 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி வரை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முயல்கின்றது.
  • இருந்த போதிலும், இந்த மசோதாவானது ஆங்கிலோ - இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு விதிமுறையை நீட்டிப்பதற்கு முன்மொழிய வில்லை. இச்சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டு விதிமுறை ஜனவரி 25 ஆம் தேதியுடன் காலாவதியாகின்றது.
  • நாட்டில் 296 ஆங்கிலோ - இந்தியர்கள் மட்டுமே உள்ளனர் என்று கூறி மத்திய அரசு இதனை நியாயப் படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்