இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பால் வெளியிடப் பட்டது.
2025 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதி நிலவரப்படி, 27 நாடுகளில் 31 பெண்கள் அரசு மற்றும் /அல்லது அரசாங்கத் தலைவர்களாகப் பணியாற்றுகின்றனர்.
ஒற்றை அல்லது கீழ் அவைகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் 27.2 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் ஆவர் என்ற நிலையில் இது 1995 ஆம் ஆண்டில் 11 சதவீதமாக இருந்தது.
ஆறு நாடுகளில் மட்டுமே ஒற்றை அவை அல்லது கீழ் அவைகளில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
ருவாண்டா (64%), கியூபா (56%), நிகரகுவா (55%), அன்டோரா (50%), மெக்ஸிகோ (50%) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (50%) ஆகிய நாடுகள் மிகச் சிறப்பான செயல்திறனைக் கொண்டுள்ளன.
உள்ளாட்சிப் பிரதிநிதி அமைப்புகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் (35.5 சதவீதம்) பெண்கள் ஆவர்.
இரண்டு நாடுகள் மட்டுமே அரசியலில் பெண்களின் பங்கேற்பில் 50 சதவீதத்தை எட்டி உள்ளது.