TNPSC Thervupettagam

அரிய ஆயுர்வேதக் கையெழுத்துப் பிரதிகள்

May 11 , 2025 16 hrs 0 min 36 0
  • மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி சபையானது (CCRAS) திரவியரத்நகர நிகண்டு மற்றும் திரவியநாமகர நிகண்டு எனப்படும் இரண்டு அரிய ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளை புதுப்பித்து வெளியிட்டுள்ளது.
  • திரவியரத்நகர நிகண்டு ஆனது (கி.பி. 1480) முத்கல பண்டிதரால் எழுதப்பட்டது.
  • இது மருந்துகளின் பெயர்கள், பண்புகள் மற்றும் சிகிச்சைப் பயன்பாடுகள் பற்றிய பல தகவல்களை வழங்கும் ஒரு விரிவான அகராதி ஆகும்.
  • பீஷ்ம வைத்தியரால் எழுதப் பட்டதாகக் கூறப்படும் திரவியநாமகர நிகண்டு ஆனது, தன்வந்தரி நிகண்டுவின் ஒரு தனித்துவமான பிற்சேர்க்கையாகும்.
  • இது ஆயுர்வேத மருந்தியலில் மிகவும் ஒரு சிக்கலான ஆனால் முக்கியமான களமாக விளங்கும் மருந்துப் பெயர்களின் ஒத்தப் பெயர்களில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்