அருண் நதியின் தாழ்மட்டப் பகுதியில் அமைந்த நீர்மின் நிலையம்
July 18 , 2021 1421 days 616 0
நேபாள நாடானது இந்தியாவின் சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம் எனும் நிறுவனத்துடன் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது கிழக்கு நேபாளத்தில் 679 மெகாவாட் திறனுடைய நீர்மின் நிலையத்தினை அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தமாகும்.
இது நேபாள நாட்டில் இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இரண்டாவது பெரிய திட்டமாகும்.
இது ஒரே திட்டத்திலான மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டமாகும்.
இந்த நீர்மின் நிலையமானது கட்டமைப்பு, உரிமம், இயக்கம் மற்றும் பரிமாற்றம் எனும் மாதிரியின் கீழ் கட்டமைக்கப்பட உள்ளது.
நேபாள நாட்டில் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட முதல் திட்டம் 1.04 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 900 மெகா வாட் திறனுடைய அருண் 3 நீர்மின் நிலையமாகும்.
அருண் நதியானது நேபாளம் வழியே பாயும் மிகப்பெரிய இமாலய நதி ஆகும்.