இந்திய அஞ்சல் சேவையின் (IPoS) மூத்த அதிகாரியான வினய பிரகாஷ் சிங், ஆசிய-பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின் (APPU) பொதுச் செயலாளராக இரண்டாவது நான்கு ஆண்டு பதவிக் காலத்திற்கு (2027-2030) போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
APPU என்பது 32 ஆசிய-பசிபிக் நாடுகளின் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும், மேலும் இது உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் (UPU) கீழ் உள்ள ஒரு பிராந்திய ஒன்றியமாகும்.
இது தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது, மேலும் உறுப்பு நாடுகளிடையே அஞ்சல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
APPU 1962 ஆம் ஆண்டில் ஆசிய-ஓசியானிக் அஞ்சல் ஒன்றியமாக (AOPU) உருவாகி, 1981 ஆம் ஆண்டில் APPU என மாறியது.
இது அப்பிராந்தியத்தில் அஞ்சல் ஒத்துழைப்பு, எல்லை தாண்டிய தளவாடங்கள், மின்-வணிகம் மற்றும் தொழில்நுட்பத் திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.