2019 – 20 ஆம் ஆண்டு கரும்புப் பருவத்திற்கான சர்க்கரை ஆலைகளால் வழங்கப்படும் கரும்பிற்கான “ஆதார மற்றும் லாபகரமான விலை” (Fair and Remunerative Price - FRP) நிர்ணயத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
FRP என்பது விவசாயிகளிடமிருந்து சர்க்கரை ஆலைகளால் வாங்கப்படும் கரும்பிற்கான குறைந்தபட்ச விலையாகும்.
இது விவசாயப் பொருட்கள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (Commission for Agricultural Costs and Prices - CACP) பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசினால் நிர்ணயிக்கப்படுகின்றது.
FRP-ஐத் தவிர, பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் FRP-ஐ விட பொதுவாக அதிகமாக இருக்கும் ஒரு மாநில ஆலோசனை விலையை அறிவித்துள்ளன.