TNPSC Thervupettagam

ஆன்டெலோப் பாறைத் தளம் - சீனா

September 16 , 2026 4 days 54 0
  • தென்சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய பராசல் தீவுகளில் உள்ள ஆன்டெலோப் பாறையில் (Antelope Reef) நில மீட்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் முதல் கட்டத்தை சீனா முடித்துள்ளது.
  • மீட்கப்பட்ட பகுதி கிட்டத்தட்ட 6 கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் ஹெலிகாப்டர் தளம், 680 மீட்டர் கப்பல் துறை, ஆழமான துறைமுகம் மற்றும் சாத்தியமான 3 கிமீ ஓடுபாதை ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • வானிலை முன்னறிவிப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்காகவே இந்த வசதிகள் என்று சீனா கூறுகிறது, அதே நேரத்தில் வியட்நாம் முழு பராசல் தீவுகளுக்கும் உரிமை கொண்டாடுகிறது; சீனா 1974 ஆம் ஆண்டு முதல் இதன் மீது உண்மையான கட்டுப்பாட்டை (de facto control) பராமரித்து வருகிறது.
  • தென்சீனக் கடல் குறித்து சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் இடையே சர்ச்சை உள்ளது; 2016 ஆம் ஆண்டு நடுவர் தீர்ப்பாயம் ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட சாசனத்தின் (UNCLOS) கீழ் அனுமதிக்கப்பட்ட கடல் உரிமைகளுக்கு அப்பாலான சீனாவின் வரலாற்று உரிமை கோரிக்கைகளை நிராகரித்தது.
  • இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் 55%-க்கும் மேற்பட்டவை தென்சீனக் கடல் மற்றும் மலாக்கா நீர்ச்சந்தி வழியாகச் செல்வதால், இந்த வளர்ச்சி இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பிற்கு முக்கியமானதாக அமைகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்