ஆப்கானிஸ்தான் தொடர்பான 4வது பிராந்தியப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை
May 31 , 2022 1497 days 742 0
தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் ஆப்கானிஸ்தான் குறித்த இரண்டு நாட்கள் அளவிலான பாதுகாப்புப் பேச்சுவார்த்தையானது நடைபெற்றது
இந்தியா, தஜிகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், கிர்கிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.
இந்தச் சந்திப்பானது, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புது தில்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் தொடர்பான 3வது பிராந்தியப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகும்.