இஸ்ரேலில் உள்ள புத்தொழில் நிறுவனமானது, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் "பசுவிலிருந்து பெறப்படாத" பாலை வணிக ரீதியாக அறிமுகப்படுத்த உள்ளது.
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் பால் என்பது உயிரித் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்திப் பசுக்கள் இல்லாமல் தயாரிக்கப்படும் உண்மையான பால் பொருள் ஆகும்.
இதில் பசுவின் பாலுக்கு ஒத்ததாக இருக்கின்ற கேசீன் மற்றும் வே புரதங்கள் உள்ளன என்பதோடுஇது சீஸ், தயிர் மற்றும் யோகர்ட் ஆகியவற்றிற்கு ஏற்றதாக உள்ளது.
பால் உற்பத்தி செய்யும் மரபணுக்கள் பால் புரதங்களைச் சுரக்கும் நுண்ணுயிரிகளில் சேர்க்கப்பட்டு துல்லியமான நொதித்தல் மூலம் தயாரிக்கப்படுகிறது.
இந்தப் பால் லாக்டோஸ் இல்லாதது, கொழுப்பு இல்லாதது, ஹார்மோன் இல்லாதது, என்பதோடுஊட்டச்சத்து ரீதியாக இது வழக்கமான பாலினை ஒத்திருக்கிறது மற்றும் கொழுப்பு அல்லது லாக்டோஸ் உள்ளடக்கத்திற்கு ஏற்ப தனிப் பயனாக்கக் கூடியது.
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் பால் ஆனது நெறிமுறை மற்றும் பருவநிலைக்கு ஏற்றது என்பதோடுவிலங்குப் பயன்பாடு, மீத்தேன் வெளியேற்றம் மற்றும் சுற்றுச் சூழல் தாக்கத்தைக் குறைக்கிறது.