பிரதமர் நரேந்திர மோடி தேசிய விளையாட்டுத் தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 29) நாடு தழுவிய “ஆரோக்கியமான இந்தியா” (Fit India) என்ற ஒரு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்தப் பிரச்சாரமானது மக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் உடற் பயிற்சி மற்றும் விளையாட்டுகள் ஆகியவற்றை மேற்கொள்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சாரம் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவின் தலைமையில் 28 நபர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த போது, இத்தினமானது ஹாக்கி வீரரான மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாள் என்பதால் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.