December 21 , 2025
3 days
99
- தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் ஆர்டர்லி முறையை முழுமையாக நீக்க உத்தரவிட்டுள்ளார்.
- பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் காவல் துறையினரை நியமிக்கக் கூடாது.
- சென்னை உயர் நீதிமன்றமானது அதிகாரப்பூர்வமற்றப் பணிகளுக்கு ஆர்டர்லிகளைப் பயன்படுத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்தது.
- 1979 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசு உத்தரவு, ஆர்டர்லி முறையை ஏற்கனவே ஒழித்திருந்தது.
- அனைத்து மூத்த நிலை காவல்துறை அதிகாரிகளும் இதற்கு முழுமையாக இணங்கச் செய்வதை மறுபரிசீலனை செய்து உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப் பட்டனர்.
- ஓர் அதிகாரியின் வீட்டில் காணப்படும் எந்தவொரு ஆர்டர்லியையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

Post Views:
99