TNPSC Thervupettagam
February 28 , 2026 2 days 49 0
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவரான ஆர். நல்லகண்ணு, பிப்ரவரி 25, 2026 அன்று சென்னையில் தனது 101 வயதில் காலமானார். அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த இவர், 1992 முதல் மூன்று முறை தமிழ்நாடு மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார்.
  • தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் 1925 ஆம் ஆண்டு பிறந்தார், பள்ளி மாணவராக இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார்.
  • 1949 ஆம் ஆண்டு, ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க கம்யூனிஸ்ட் தலைவர்கள் திட்டமிட்டதாகக் கூறி, நெல்லை சதி வழக்கில் அவர் கைது செய்யப் பட்டார்.
  • நெல்லை சதி வழக்கில் கே. பாலதண்டாயுதம், பி. மாணிக்கம், ஐ. மாயாண்டிபாரதி மற்றும் பலருடன் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
  • 1956 ஆம் ஆண்டு சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
  • ஆங்கிலேய அரசாங்கத்தாலும் பின்னர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தாலும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது அவர் தலைமறைவாக வாழ்ந்தார்.
  • 1964 ஆம் ஆண்டு, இந்திய-சீனப் போருக்குப் பிறகு இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுபட்ட போது, ​​அவர் சிபிஐ-யில் தொடர்வதைத் தேர்ந்தெடுத்தார்.
  • 1999 ஆம் ஆண்டு, கோயம்புத்தூரில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார்.
  • தாமிரபரணி நதிப் படுகையில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரான பிரச்சாரத்தை அவர் தலைமை தாங்கினார் என்பதோடு மேலும் 2010 ஆம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கை (PIL) தாக்கல் செய்தார் என்ற நிலையில் அங்கு அவர் தனிப்பட்ட முறையில் வாதிட்டு மணல் அகழ்வுக்குத் தடை உத்தரவைப் பெற்றார்.
  • ஆகஸ்ட் 15, 2022 அன்று, மு. க ஸ்டாலின் வழங்கிய தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதைப் பெற்ற அவர் தனது சொந்தப் பணமான 5,000 உடன் பரிசுத்தொகை 10 லட்சத்தையும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்