TNPSC Thervupettagam

ஆலங்குடி மருத்துவமனை - NQAS மற்றும் காயகல்ப் சான்றிதழ்

July 20 , 2025 7 days 60 0
  • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான தேசியத் தர உறுதி தரநிலைகள் (NQAS) மற்றும் காயகல்ப் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.
  • தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் 2013 ஆம் ஆண்டில் NQAS நிறுவப் பட்டது.
  • அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் தரமான சுகாதார சேவைகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வெளிப்புற சுகாதாரப் பராமரிப்புத் தரத்திற்கானச் சங்கத்தில் தரநிலைகளுக்கானத் தேசியச் சங்கத்தினால் தரநிலைகள் சரிபார்க்கப்படுகின்றன.
  • காயகல்ப் என்பது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு தேசிய முன்னெடுப்பாகும்.
  • இது பொது சுகாதார வசதிகளில் தூய்மை, சுகாதாரம் மற்றும் நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது முறையே மருத்துவ மற்றும் கிராமப்புறச் சுகாதாரச் சேவைகள் இயக்குநரகம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள இரண்டாம் நிலை மற்றும் முதன்மை நிலை பராமரிப்பு மையங்களில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்