TNPSC Thervupettagam

ஆலயச் சடங்குகள் செய்வதற்கு இயந்திர யானை அறிமுகம்

March 2 , 2023 906 days 462 0
  • கேரளாவில் திருச்சூரில் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சடபில்லி கோயில் அதன் ஆலயச் சடங்குகளைச் செய்வதற்காக (மோட்டார்) இயக்கி பொருத்தப்பட்ட ஒரு யானையின் உருவத்தினை ஒத்த அளவிலான ஒரு மாதிரியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது இந்தியாவில் இந்த மாதிரியிலான முதல் முயற்சி ஆகும்.
  • பீட்டா இந்தியா அமைப்பானது இதனை அக்கோவிலுக்குப் பரிசாக வழங்கியது.
  • யானையின் உருவத்தினை ஒத்த அளவிலான இயந்திர யானைக்கு இரிஞ்சடபில்லி ராமன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இதில் 4 பேர் பயணம் செய்ய முடியும்.
  • இந்த யானையின் தலை, கண், வாய், காது, வால் ஆகிய அனைத்தும் மின்சாரம் மூலமாக இயங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்