TNPSC Thervupettagam

ஆளில்லா விமானங்கள் மற்றும் பறக்கும் கார்களுக்கான முதல் விமான நிலையம்

May 25 , 2022 1085 days 388 0
  • மின்சாரத்தில் இயங்கும் ஆளில்லா விமானங்கள் மற்றும் பறக்கும் கார்களுக்கான உலகின் முதல் விமான நிலையம் ஐக்கியப் பேரரசில் உள்ள ஒரு நகரத்தின் மையப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.
  • பாப்-அப் ஏர்-ஒன் என்ற இந்த விமான நிலையமானது கோவென்ட்ரி நகரில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
  • இது பூஜ்ஜிய உமிழ்வு அம்சத்தினைக் கொண்ட மின்சாரத்தில் இயங்கும் ஆளில்லா விமானங்கள் மற்றும் வாடகை விமானச் சேவைகள் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • மேலும், இந்த விமான நிலையமே ஹைட்ரஜன் எரிபொருள் கலன்கள் மூலம் இயக்கப் படுகிறது.
  • நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதில் நகர்ப்புற வான்வழிப் போக்குவரத்துத் திறனைப் றைசாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்