நிலையான மேம்பாட்டிற்கான புவியியல் அமைப்புகளை மேம்படுத்துவது குறித்த ஆசிய-பசிபிக் மன்றத்தை இந்தியா தொகுத்து வழங்கியது.
புவியியல் அமைப்புகள் GIS (புவியியல் தகவல் அமைப்பு), GPS (உலகளாவிய நிலைப் படுத்தல் அமைப்பு), தொலை உணர்வு, ஆளில்லா விமானங்கள் மற்றும் ஒளி கண்டறிதல் மற்றும் வரம்பு நிர்ணயம் (LiDAR)போன்ற கருவிகளைப் பயன்படுத்துகின்றன.
ஐக்கிய நாடுகளின் உலகளாவியப் புவியியல் தகவல் மேலாண்மைக்கான நிபுணர் குழு (UN-GGIM) என்பது ஐ.நா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் கீழ் புவியியல் கொள்கைகளை உருவாக்குவதற்கான உலகளாவிய அமைப்பாகும்.
இந்த அமைப்புகள் நகர்ப்புறத் திட்டமிடல், உள்கட்டமைப்பு மேம்பாடு, பேரிடர் மேலாண்மை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உதவுகின்றன.
தேசியப் புவியியல் கொள்கை 2022 மற்றும் தேசியப் புவியியல் திட்டம் (2025-26) ஆகியவை அரசாங்கத்தின் முன்னெடுப்புகளில் அடங்கும்.
eLoc என்பது இந்தியாவின் ஒவ்வொரு இடத்திற்கும் தனித்துவமான ஆறு எழுத்துக்கள் கொண்ட டிஜிட்டல் முகவரியை வழங்கும் ஒரு தேசிய டிஜிட்டல் முகவரி அமைப்பாகும்.