TNPSC Thervupettagam

ஆழ்கடல் சுரங்க ஈடுபாட்டில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா

November 10 , 2025 11 days 56 0
  • மினாமிடோரிஷிமா தீவுக்கு அருகில் ஆழ்கடல் சுரங்கத்தை உருவாக்க ஜப்பானும் அமெரிக்காவும் ஒரு கூட்டாண்மையை அறிவித்துள்ளன.
  • தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு இன்றியமையாத அருமண் வளங்களைப் பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஜப்பானின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் (EEZ) 5,000 முதல் 6,000 மீட்டர் ஆழத்தில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த ஆய்வு தொடங்கும்.
  • சீனா தற்போது உலகின் சுத்திகரிக்கப்பட்ட அருமண் மற்றும் காந்தங்களில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை உற்பத்தி செய்கிறது.
  • இந்தத் திட்டமானது உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைப் பன்முகப் படுத்தவும் சீன ஏற்றுமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்