TNPSC Thervupettagam

இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம்

June 15 , 2020 1863 days 746 0
  • இடஒதுக்கீடு குறித்த உரிமையானது ஓர் அடிப்படை உரிமையல்ல என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
  • இது தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரியில் ஒபிசி பிரிவினருக்கு (இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர்) இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பல்வேறு வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து விசாரித்து வருகின்றது. 
  • இடஒதுக்கீட்டு உரிமையானது ஓர் அடிப்படை உரிமை என்று எவரும் கோர முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே இடஒதுக்கீட்டுப் பயன்கள் அளிக்கப்படாதது எந்தவொரு அரசியலமைப்பு உரிமையின் மீதான விதிமீறலும் அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 
  • ஒரு பொதுப் பிரச்சினைக்காக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து வந்திருப்பதை உச்சநீதிமன்றம் பாராட்டியுள்ளது.
  • உச்சநீதிமன்றமானது மதராஸ் உயர்நீதிமன்றத்தை அணுகி மேல்முறையீடு செய்து அங்கேயே இதற்குரிய நிவாரணத்தைப் பெறுமாறு மனுதாரர்களிடம் கூறியுள்ளது.
  • இந்த மனுக்கள் 2020-21 ஆம் ஆண்டில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் தொடர்பான பாடப் பிரிவுகளுக்கு அகில இந்திய இடஒதுக்கீட்டிற்கு வேண்டி தமிழ்நாட்டினால் வழங்கப்பட்ட இடங்களில் 50% இடங்கள் ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று கூறுகின்றது.
  • தமிழ்நாட்டில் ஒபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 69% இடஒதுக்கீடும் அதற்குள் ஒபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50%ற்கும் மேல் உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்