இணையவெளிக் குற்றங்கள் குறித்த கட்டாய அறிக்கைத் தாக்கல்
May 5 , 2022 1145 days 534 0
நாட்டில் நிகழும் அனைத்து வகையிலான இணையவெளிப் பாதுகாப்பு குற்றச் சம்பவங்கள் குறித்தும் அந்தந்த நிறுவனங்கள் ஆறு மணிநேர காலக் கெடுவிற்குள் இந்திய கணினி அவசர நிலைச் செயல்பாட்டுக் குழுவிற்கு (CERT-In) அறிக்கையினைத் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்தியாவில் இயங்கும் இடைத்தரகு நிறுவனங்கள், சேவை வழங்குநர்கள், சேவை நிறுவனங்கள், தரவு மையங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் இந்தப் புதிய வழிகாட்டுதல்களைக் கட்டாயமாக்கியுள்ளது.