இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நீதிபதி ரோஹிணி ஆணையம்
October 23 , 2019 2096 days 727 0
நீதிபதி ரோகிணி தலைமையிலான ஆணையமானது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் துணை வகைப்பாடு நிலை குறித்து மாநிலங்களின் விளக்கங்களை பெறுவதற்காக ‘மாநிலங்களுக்கு’ அழைப்பு விடுத்துள்ளது.
இந்தத் துணை வகைப்படுத்துதலின் விளைவாக மத்தியப் பட்டியலில் தெளிவற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜி.ரோஹிணியின் கீழ் இந்த குழுவானது 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று அமைக்கப் பட்டது.
இந்த ஆணையமானது மத்தியப் பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சாதிகள், சமூகங்கள், துணைச் சாதிகள் போன்ற ஒத்த சொற்களை அடையாளம் கண்டு அவற்றைத் துணைப் பிரிவுகளாக வகைப்படுத்த நியமிக்கப் பட்டது.