- 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி உச்ச நீதிமன்றமானது, தகாத உறவிற்காக ஆண்களை மட்டும் தண்டிக்கின்ற, 1860 ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code - IPC) 497வது விதியை செல்லாது என ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது.
- கேரளாவைச் சேர்ந்த ஜோசப் ஷைன் என்பவர் தாக்கல் செய்த மனுவின் மீது 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
- நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டுமே இந்த அமர்வில் இடம்பெற்ற ஒரே பெண் நீதிபதியாவார்.
- உச்ச நீதிமன்றமானது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Criminal Procedure Code - CrPC) பிரிவு 198(1) மற்றும் 198(2) ஆகிய இரண்டையும் செல்லாதது எனவும் கூறியிருக்கின்றது.
- குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இந்த பிரிவுகள் கணவர்களுக்கு தங்களது மனைவிமார்கள் எந்த ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபடுகின்றனரோ அவர்கள் மீது புகாரளிக்க அனுமதியளிக்கும்.
- உச்ச நீதிமன்றமானது
- தகாத உறவுச் சட்டம், வாழ்வியல் உரிமையான விதி 21 என்பதையும் சமத்துவ உரிமையான விதி 14 என்பதையும் மீறுவதாகவும்,
- 497வது பிரிவு பெண்களின் கண்ணியத்தையும் சமத்துவத்தையும் அவமதிப்பதாகவும், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் தங்களது கணவர்மார்களின் சொத்து எனக் கருதுவதாகவும்,
தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
- மேலும் உச்சநீதிமன்றம், தகாத உறவானது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 306வது விதியான தற்கொலைக்கு தூண்டுதல் என்ற குற்றத்தை ஏற்படுத்தாத வரை அதனைக் குற்றமெனக் கருத இயலாது எனத் தீர்ப்பளித்துள்ளது.