TNPSC Thervupettagam

இந்தியத் திறன்கள் நிறுவனம் - 3 நகரங்கள்

September 13 , 2019 2116 days 700 0
  • மத்தியத் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் ராஜ் குமார் சிங் மும்பையில் உள்ள இந்தியத் திறன்கள் நிறுவனத்திற்கு (Indian Institute of Skills - IIS) அடிக்கல் நாட்டினார்.
  • குறிக்கோள்: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பின்னர் தொழில்நுட்பக் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த துறைகளில் திறன் பயிற்சிகளை அளித்தல்.
  • ஒவ்வொரு ஆண்டும் 70% வேலைவாய்ப்புகளுடன் 5,000 பயிற்சியாளர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை உறுதிப்படுத்த IIS முயல்கின்றது.
  • IIS ஆனது இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் வரிசையில் செயல்பட இருக்கின்றது.
  • ஆரம்பத்தில் மும்பை, அகமதாபாத் மற்றும் கான்பூர் ஆகிய 3 இடங்களில் IISகள் அமைக்கப்பட விருக்கின்றன.
  • IISகள் தொடங்குவது இந்தியாவை உலகின் திறன்கள் தலைநகராக மாற்றுவதற்கான ஒரு படியாகும்.
  • இந்த நிறுவனங்கள் ஒரு பொது - தனியார் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட விருக்கின்றன. மும்பையில் உள்ள டாடா கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையானது IISஇன் ஒரு தனியார் பங்காளர் நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்