மத்திய அரசானது, பருத்தி மற்றும் நூல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்கவும், அத்துறையில் உறுதியான வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்தியப் பருத்திச் சபையினை அமைத்துள்ளது.
இச்சபைக்கு மூத்த தொழிலதிபர் சுரேஷ் பாய் கோடக் தலைமை வகிக்க உள்ளார்.
இந்தியப் பருத்திச் சபையின் முதல் சந்திப்பானது, 2022 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
அதன் முதல் சந்திப்பின் போது, இத்துறையில் உறுதியான வளர்ச்சியைக் கொண்டு வருவது குறித்து விவாதித்து, ஆலோசித்து, ஒரு வலுவான செயல் திட்டத்தை இச்சபை தயாரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
உலகளவிலான பருத்தி உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்கு மண்டலம் இந்தியாவில் பருத்தி உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள மண்டலம் ஆகும்.
இந்தியாவின் பருத்தி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள பகுதி கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு மண்டலம் ஆகும்.