இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பை நிறுவிய நாள்
August 15 , 2020 2205 days 907 0
இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பின் 33வது நிறுவிய நாளானது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
இது பழங்குடியினரால் உற்பத்தி செய்யப்படும் சிறு வன உற்பத்திப் பொருள் மற்றும் உபரி வேளாண் உற்பத்தி ஆகியவற்றின் வர்த்தகத்தை நிறுவனமயமாக்குவதன் மூலம் நாட்டில் பழங்குடியினரின் சமூகப் பொருளாதார நிலைமையில் வளர்ச்சியைக் கொண்டு வர ஏற்படுத்தப்பட்ட ஒரு தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்பாகும்.
இது 1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது பழங்குடி விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.