இந்தியப் பெருங்கடலில் விழுந்தது சீனாவின் ராக்கெட்
May 12 , 2021
1509 days
697
- சீனாவானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று லாங் மார்ச் 5B என்ற ராக்கெட்டினை (ஏவுகலத்தினை) விண்ணில் செலுத்தியது.
- இந்த ராக்கெட்டானது சீன விண்வெளி மையத்திற்கான தியான்ஹே முதன்மைப் பெட்டக வானறையினை (Core Module) சுமந்து சென்றது.
- 22.5 டன் எடையுள்ள தியான்ஹே முதன்மைப் பெட்டக வானறையானது கனமான விண்வெளிப் பெட்டக வானறைகளுள் ஒன்றாகும்.
- வளிமண்டலத்தின் இழுவிசை காரணமாக இந்த ராக்கெட்டின் முதல் நிலை பாகமானது சிதைவடையத் தொடங்கியது.
- இந்த ராக்கெட் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுகளின் அருகே கடலில் வீழ்ந்தது.

Post Views:
697