TNPSC Thervupettagam

இந்தியாவின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு

June 10 , 2025 6 days 44 0
  • இந்தியாவானது 16 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு நடத்தப்படவுள்ள தனது மக்கள்தொகை கணக்கெடுப்பை 2027 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் தேதிக்குள் மேற் கொள்ள உள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியத் தலைமைப் பதிவு அலுவலகம் ஆனது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துகிறது.
  • இது சுதந்திர இந்தியாவில் மிகவும் முதல் முறையாக சாதிகளின் கணக்கெடுப்பையும் உள்ளடக்கிய வகையிலான இந்தியாவின் முதல் எண்ணிம வகையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பாக இருக்கும்.
  • இது வரை பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) ஆகிய இரண்டு பிரிவுகளின் அட்டவணைகள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளன.
  • மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆனது 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது என்பதோடு மேலும் இந்தத் தரவிற்கு 2027 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் தேதியன்று நள்ளிரவு 12 மணியானது குறிப்புத் தேதியாகக் குறிக்கப்பட்டுள்ளது.
  • பிற பகுதிகளோடு ஒத்திசையாத லடாக் ஒன்றியப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் பனிப்பொழிவு பகுதிகள் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற சில மாநிலங்களுக்கு, மக்கள் தொகை கணக்கெடுப்பு மீதான குறிப்புத் தேதியானது 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியாக குறிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு முன்னதாக 2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது.
  • 2021 ஆம் ஆண்டில் நடைபெற திட்டமிடப்பட்ட அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆனது, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக காலவரையின்றித் தாமதமானது.
  • அரசியலமைப்பு ஆணையின்படி, 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகான முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து மக்களவைத் தொகுதிகளை ஒரு மறுவரையறை செய்வதற்கான அடிப்படையாகப் பயன்படுத்தலாம்.
  • இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பானது, மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள்1990 ஆகியவற்றின் கீழ் நடத்தப்படுகிறது.
  • இது முதலில், வீடுகள் வாரியான ஒரு பட்டியல் மற்றும் வீட்டுவசதிப் பட்டியல்; பின்னர், மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக முடிக்கப்படும்.
  • இதில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) புதுப்பிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
  • திட்டமிடப்பட்ட 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தின் போது மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கப்பட இருந்தது.
  • 2003 ஆம் ஆண்டு குடியுரிமை விதிகளின் படி, NPR என்பது இந்தியக் குடிமக்களின் தேசிய பதிவேட்டை (NRIC/NRC) தொகுப்பதற்கான முதல் படி நிலையாகும்.
  • தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) கடைசியாக 2015 ஆம் ஆண்டு புதுப்பிக்கப் பட்டது.
  • முதல் NPR 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது, பின்னர் இந்தத் தரவு 2015 ஆம் ஆண்டு வீடுகள் வாரியான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதன் மூலம் புதுப்பிக்கப்பட்டது.
  • இது 119 கோடி குடியிருப்பாளர்களின் தரவுத் தளத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்