இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கம்பிவட தாங்கு பாலம்
July 31 , 2025 4 days 29 0
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கம்பிவட தாங்கு பாலமான சிகந்தூர் பாலத்தைத் திறந்து வைத்தார்.
இது கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தின் சாகர் தாலுக்காவில் ஷராவதி உப்பங் கழியின் குறுக்கே கட்டப்பட்டது.
சாகரா மற்றும் மரகுடிகா இடையேயான இந்தப் பாலம் 2.44 கி.மீ நீளமும் 16 மீட்டர் அகலமும் கொண்டது.
சுதர்சன் சேது (ஓகா-பேட் துவாரகா சிக்னேச்சர் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது), ஆனது ஓகா நிலப்பகுதியையும் குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கம்பிவட தாங்கு பாலமாகும்.
அடல் சேது (மும்பை துறைமுக இணைப்பு) இந்தியாவின் மிகவும் நீளமான பாலம் மற்றும் நாட்டின் மிகவும் நீளமான கடல் பாலமாகும்.