இந்தியாவின் எண்ணிமத் துறைத் திட்டப் பலன்களின் மூலம் பெற்ற தகவல்களைத் தொகுக்கச் செய்தல் – அறிக்கை
April 16 , 2023 842 days 315 0
சர்வதேச நாணய நிதியமானது, ‘இந்தியாவின் எண்ணிமத் துறைத் திட்டப் பலன்களின் மூலம் பெற்ற தகவல்களைத் தொகுக்கச் செய்தல்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
இதன் படி உலகத் தரத்திலான ஒரு எண்ணிமப் பொது உள்கட்டமைப்பினை இந்தியா உருவாக்கி உள்ளது.
இது வாழ்க்கை நிலை மற்றும் பொருளாதாரத்தினை மாற்றியமைக்கச் செய்வதோடு, பல நாடுகளுக்கு இது ஒரு படிப்பினையாக விளங்கும்.
இந்தியத் தொகுப்பு என்பது இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எண்ணிமப் பொது உள்கட்டமைப்புகளுக்கான (DPIs) ஒரு தொகுப்புப் பெயராகும்.
இது மூன்று வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டுள்ளது.
தனிப்பட்ட அடையாளம் (ஆதார்),
சிறப்பானப் பண வழங்கீட்டு முறைகள் (ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடை முகம், ஆதார் பண வழங்கீட்டு இணைப்பு, ஆதார் இணைக்கப்பட்ட பண வழங்கீட்டுச் சேவை), மற்றும்
தரவுப் பரிமாற்றம் (டிஜிலாக்கர் மற்றும் கணக்குத் திரட்டுச் செயலிகள்).